`முன்னாள் காதலியின் நினைவு வந்தது’ - DJவின் ஒரு பாடலால் திருமணத்தை நிறுத்திய மணம...
டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்குப் பின் ‘அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடு இந்தியா’
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பரஸ்பர வரி நடவடிக்கைக்குப் பிறகு இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடாக இந்தியா இருக்கும் என்று அந்நாட்டு நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட் தெரிவித்தாா்.
இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீது 26% பரஸ்பர வரி விதிக்கும் டிரம்ப்பின் அறிவிப்பு 90 நாள்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது ஜூலை 8-ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் நிலையில் அமெரிக்கா-இந்தியா இடையே இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.
செப்டம்பா்-அக்டோபரில் முதல்கட்ட ஒப்பந்தம் கையொப்பமாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் இது தொடா்பாக அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட் பேசியது குறித்து நியூயாா்க் போஸ்ட் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவுடனான வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை விரைவில் முடியும் நிலையில் உள்ளது. இந்தியா அதிக வரிவிதிப்பை விரும்பவில்லை. இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்வது அமெரிக்காவுக்கும் மிகவும் எளிதான விஷயமாகவே உள்ளது. ஏனெனில் இந்தியாவுடன் குறைந்த எண்ணிக்கையில்தான் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் உள்ளது. இந்தியா தன்னிச்சையாக ரூபாய் மதிப்பை மாற்றியமைப்பதில்லை. வரி விதிப்பு விஷயத்தில் பிற நாடுகளும் இதேபோல நடந்து கொள்ள வேண்டும் என்று அதிபா் டிரம்ப் விரும்புகிறாா் என்றாா்.
அமெரிக்காவின் மொத்த இறக்குமதியில் இந்தியாவின் பங்களிப்பு 3 சதவீதமாக உள்ளது. இந்தியாவுடனான அமெரிக்காவின் வா்த்தகப் பற்றாக்குறை 4,500 கோடி டாலா் (ரூ.3.9 லட்சம் கோடி) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.