செய்திகள் :

டிரம்மில் பல துண்டுகளாக கணவரின் உடல்; கொன்றுவிட்டு காதலனுடன் ஹோலி கொண்டாடிய பெண் - உ.பி அதிர்ச்சி!

post image

உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டைச் சேர்ந்த முஸ்கான் என்ற பெண் தனது கணவர் செளரப் ரஜபுத்திற்கு தூக்க மாத்திரை கொடுத்து வெட்டி கொலை செய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தன்னுடைய ஆண் நண்பர் சாஹில் என்பவருடன் சேர்ந்து கொலை செய்து உடலை பல துண்டுகளாக வெட்டி டிரம் ஒன்றில் போட்டு அடைத்துவிட்டு, சிம்லாவிற்கு சென்றார் முஸ்கான். இருவரும் சிம்லாவில் இருந்து வந்த பிறகு போலீஸில் பிடிபட்டனர். முஸ்கானின் தாயாரே தனது மகளை பிடித்து போலீஸில் ஒப்படைத்துள்ளார். முஸ்கானும், அவரது ஆண் நண்பர் சாஹிலும் சேர்ந்து கொலை செய்துவிட்டு சிம்லாவிற்கு சென்று ஹோலி கொண்டாடிய வீடியோக்கள் வெளியாகி இருக்கிறது. இருவரும் மகிழ்ச்சியோடு ஹோலி விளையாடியதோடு இருவரும் சேர்ந்து போட்டோவிற்கும் போஸ் கொடுத்துள்ளனர். சிம்லா மட்டுமல்லாது மணாலிக்கும் இருவரும் சென்றுள்ளனர்.

உடல் இருந்த பிளாஸ்டிக் டிரம்

அங்கு சாஹில் பிறந்தநாளை இருவரும் சேர்ந்து கொண்டாடி இருக்கின்றனர். பிறந்தநாள் கேக்கை எடுத்து சாஹிலுக்கு முஸ்கான் ஊட்டி விடுவது போலவும், முத்தமிடுவது போலவும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதோடு அவர்கள் பனிச்சறுக்கில் நடந்து சென்ற வீடியோவும் வெளியாகி இருக்கிறது. போலீஸாரின் விசாரணையில் சாஹில்தான் முஸ்கானுக்கு மதுபழக்கத்தை ஏற்படுத்தியதாக தெரிய வந்துள்ளது. அதோடு சாஹிலுக்கு தேவையான பணத்தை முஸ்கான் தனது கணவர் அனுப்பும் பணத்தில் இருந்து எடுத்து கொடுத்துள்ளார்.

முஸ்கானும், சாஹிலும் மகிழ்ச்சியாக இருந்தபோது முஸ்கான் வீட்டு உரிமையாளர் நேரில் பார்த்துவிட்டார். அவர் இது தொடர்பாக செளரப் ரஜபுத்திடம் தெரிவித்தார். இதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு ரஜபுத் விவாகரத்து மனு தாக்கல் செய்தார். அதன் பிறகு குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தனர்.

கைது

அப்படி இருந்தும் முஸ்கான் சாஹிலுடனான தொடர்பை கைவிடாமல் தொடர்ந்து வந்தார். கணவனை கொலை செய்து பல துண்டுகளாக வெட்ட திட்டமிட்டு முன்கூட்டியே இரண்டு கத்தியை வாங்கி வந்துள்ளார். அவர் கடைக்காரரிடம் சிக்கன் வெட்ட தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். செளரப்பை மார்ச் 3ம் தேதி கொலை செய்தனர். அதற்கு முன்பு பிப்ரவரி 25ம் தேதியும் கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நித்தியானந்தா சீடர்களை ஆசிரமத்திலிருந்து குண்டுக்கட்டாக வெளியேற்றிய போலீஸ்! நடந்தது என்ன?

ராஜபாளையம் அருகே காட்டுப்பகுதியில் நீதிமன்ற உத்தரவினை மீறி இரு வேறு இடங்களில் ஆசிரமங்கள் கட்டி வாழ்ந்து வந்த நித்தியானந்தா சீடர்களை வருவாய் துறையினரும், போலீசாரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இந்த ச... மேலும் பார்க்க

கோவை ஐ.டி ஊழியரின் காரில் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி - நள்ளிரவில் அதிர்ச்சி

கோவை, சிங்காநல்லூர் பகுதியில் நேற்று நள்ளிரவு ஒரு ஆம்புலன்ஸ் வேகமாக சென்றுள்ளது. அப்போது அந்த வழியே சென்ற ஒரு கார் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் சென்றுள்ளது. தொடர்ந்து அவர் வழிவிடாமல் இருந்த காரணத்தால் ஆம... மேலும் பார்க்க

`முட்டி போடு டா' - கோவை சீனியர் மாணவரை சுற்றி சுற்றி தாக்கிய ஜூனியர் மாணவர்கள்

கோவை மாவட்டம், திருமலையம்பாளையம் அருகே உள்ள தனியார் கல்லூரி மாணவர் விடுதியில் முதுகலை சீனியர் மாணவர் ஒருவரை, இளங்கலை மாணவர்கள் கூட்டாக சேர்ந்து தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏ... மேலும் பார்க்க

Google Review: விடுதி குறையை ஆன்லைனில் சுட்டிக் காட்டிய மாணவர் மீது தாக்குதல்; நடந்தது என்ன?

கர்நாடக மாநிலம் மங்களூரில், ஆன்லைனில் எதிர்மறையான விமர்சனம் எழுதியதற்காக 18 வயது பொறியியல் மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலபுரகியைச் சேர்ந்த விகாஸ் என்ற மாணவர், கடந்... மேலும் பார்க்க

மருத்துவ செலவுக்கு ரூ.13 லட்சம் கடன் வாங்கியவரிடம் கந்து வட்டி வசூலித்து, தாக்குதல் - பெண் கைது!

சென்னை அமைந்தகரை, சான்றோர்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் ராஜலட்சுமி (37). இவரின் தம்பி சதீஷ்குமார். கடந்த 2023-ம் ஆண்டு விபத்து ஒன்றில் சதீஷ்குமார் சிக்கினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சதீஷ்... மேலும் பார்க்க

விருதுநகர்: தொட்டில் கயிற்றில் ஊஞ்சலாடி விளையாடிய சிறுவன்; கழுத்தில் கயிறு இறுகி பலி

விருதுநகரில் தொட்டில் கயிற்றில் ஊஞ்சலாடி விளையாடிய சிறுவன் கழுத்தில் கயிறு இறுகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர்... மேலும் பார்க்க