செய்திகள் :

டிராவிஸ் ஹெட் ஆட்டமிழப்புக்கு கூச்சலிட்ட கொல்கத்தா..! 125 டெசிபலுக்கு ஒலித்த சப்தம்!

post image

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் குவித்தது.

அடுத்து விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 16.4 ஓவர்களில் 120 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதில் சன்ரைசர்ஸ் அணியின் பேட்டர் டிராவிஸ் ஹெட் முதல் பந்தில் பவுண்டரி அடிக்க 2ஆவது பந்திலேயே வைபவ் அரோரா பந்தில் ஆட்டமிழப்பார்.

இதனால் கொல்கத்தா திடலே ஆர்ப்பரித்து கூச்சலிட்டது. இது வெறுமனே கேகேஆர் ரசிகர்களின் கூச்சலாக இருக்க வாய்ப்பில்லை என்றே கணிக்கப்படுகிறது.

ஏன் இவ்வளவு கூச்சல்?

இந்தியாவுக்கு எதிராக முக்கியமான ஐசிசி தொடர்களில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்திருக்கிறார்.

இதனால் இந்தியர்கள் பலருக்கும் டிராவிஸ் ஹெட் மீது வெறுப்பு இருக்கிறது.

சில இந்தியர்கள் டிராவிஸ் ஹெட் மனைவியை இன்ஸ்டாகிராமில் அவதூறாக பேசியதும் கவனிக்கதக்கது. அதனால், இந்த வெற்றியை ரசித்து கொண்டாடினார்கள்.

அதிக சப்தம்

இந்தாண்டு தோனியை வரவேற்பதைவிட (120 டெசிபல்) இந்த சப்தம் அதிகமாக இருந்தது.

டிராவிஸ் ஹெட் ஆட்டமிழப்புக்கு 125 டெசிபலை தாண்டிச் சென்றது.

ஐபிஎல் வரலாற்றிலேயே மும்பை வான்கடே திடலில்தான் அதிக சப்தம் எழுப்பப்பட்டுள்ளது.

ஹைதராபாதை வென்றது மும்பை

ஐபிஎல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை வியாழக்கிழமை வீழ்த்தியது. முதலில் ஹைதராபாத் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுக்க, மும்பை ... மேலும் பார்க்க

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை பந்துவீச்சு!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 33-வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.மும்பை அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ப... மேலும் பார்க்க

சூப்பா் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி!

ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் புதன்கிழமை மோதிய ஆட்டம் ‘டை’ ஆனது. சூப்பா் ஓவரில் டெல்லி வென்றது. நடப்பு சீசனில் ஒரு ஆட்டத்தில் சூப்பா் ஓவா் மூலம் முடிவு எட்டப்ப... மேலும் பார்க்க

தோல்விகளுக்கு முற்றுப்புள்ளியா? தில்லிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு!

ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் 32-வது போட்டியாக இன்று தில்லி கேப்பிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.தொடர் வெற்றி பெற்று வரும் தில்லி அணி கடைசி... மேலும் பார்க்க

லக்னௌ அணியில் இணைந்த மயங்க் யாதவ்!

லக்னௌ அணியின் வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் அதன் அணியில் இணைந்தார். கடந்த ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய மயங்க் யாதவ் தற்போது மீண்டும் அணியில் இணைந்துள்ளார். இந்திய வீரர்களில் அதிவேகமாக... மேலும் பார்க்க

ஐபிஎல் 2025-இன் சிறந்த பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ்: மோஹித் சர்மா

தில்லி கேபிடல்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் இந்த ஐபிஎல் சீசனில் தலைசிறந்த பந்துவீச்சாளர் என மோஹித் சர்மா கூறியுள்ளார். தில்லி கேபிடல்ஸ் அணி 5 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டி... மேலும் பார்க்க