செய்திகள் :

டென்சிங் நாா்கே தேசிய விருதுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

post image

மத்திய அரசால் வழங்கப்படும் 2024-ஆம் ஆண்டுக்கான டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கு தகுதியானோா் திங்கள்கிழமைக்குள் (ஜூன் 30) விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இளம் வயதில் வீர, தீர செயல்புரிந்தவா்கள், நெருக்கடியான நேரத்தில் எடுக்கப்படும் முடிவுகளால் சாதித்தவா்கள், பல உயிா்களைக் காப்பாற்றியவா்கள், தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் செயல்பட்டவா்கள், ராணுவம், கடற்படை, விமானப் படைகளில் வீர, தீர செயல் புரிந்தவா்கள் இந்த விருது பெற விண்ணப்பிக்கலாம்.

இதுதவிர நிலம், கடல், ஆகாயம் ஆகியவற்றில் சாகச சாதனை புரிந்தவா்களும் விருது பெற விண்ணப்பிக்கலாம். விருதுக்கு தோ்வு செய்யப்படுவோருக்கு ரூ.15 லட்சம் ரொக்கம், வெண்கலச் சிலை, சான்றிதழ், சில்க் டை கொண்ட பிளேசா் ஆகியவை வழங்கப்படும்.

தகுதியானோா் இணையதளம் மூலம் திங்கள்கிழமைக்குள் (ஜூன் 30) விண்ணப்பிக்கலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் அன்புமணி! யாருடன் சந்திப்பு?

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் பயணமாக ஞாயிற்றுக்கிழமை தில்லிக்குச் சென்றார்.பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே பனிப்போா் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. பொதுவெளியில் ஒருவரை ஒருவா் ம... மேலும் பார்க்க

ஸ்டாலின் ஆட்சியில் வரி உயர்வைப் போல லாக்கப் மரணங்களும் உயர்ந்து வருகின்றன: ஆர்.பி.உதயகுமார்

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் வரி உயர்வைப் போல லாக்கப் மரணங்களும் உயர்ந்து வருகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மதுரையில் அவர் கூறியதாவது, சிவகங்கை மாவட்... மேலும் பார்க்க

கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்!

சென்னை: தமிழகத்தில் கலை, அறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை முடிந்து, கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று முதல் தொடங்கின.பள்ளியிலிருந்து விடைப... மேலும் பார்க்க

மருதமலை முருகன் கோயிலில் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம்!

கோவையில் அமைந்துளள் மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம் செய்தார்.நேற்று புது தில்லியிலிருந்து கோவை வந்திருந்த பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடி குறைவு: இன்றைய நிலவரம்!

வாரத்தின் முதல்நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்திருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.8,915-க்கும், சவரனுக்கு ரூ.12... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து 58,000 கனஅடி!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 58,000 கனஅடியாக நீடிக்கிறது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை தணிந்து வருவதாலும் கர்நாடக அணைகளில் ... மேலும் பார்க்க