செய்திகள் :

டெல்லி: "மற்ற ஆண்களிடம் பேசாதே" - தோழியை எரித்த கொன்ற மாணவர்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

post image

டெல்லி மெஹ்ரெளவி பகுதியைச் சேர்ந்த 18 வயது பெண், டெல்லி பல்கலைக்கழக திறந்த வெளி பள்ளியில் பி.காம் படித்து வந்தார். அவருக்கும் அர்ஷ்கிரித் சிங் (18) என்பவருக்கும் பார்ட்டி ஒன்றில் தொடர்பு ஏற்பட்டது.

சிங்கும் பி.காம் படித்து வந்தார். இருவரும் நெருங்கிப் பழகி வந்தனர். மாணவி கிளாஸ் செல்வதாகத் தனது பெற்றோரிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்.

கிளாஸிலிருந்து தனது தாயாருக்கு போன் செய்து தான் விரைவில் வந்துவிடுவதாகத் தெரிவித்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் மாணவியின் பெற்றோர் அச்சம் அடைந்தனர்.

மாணவியின் தாயாருக்கு சிங்கின் தந்தை போன் செய்து தனது மகன் தாக்கப்பட்டு இருப்பதாகவும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

மாணவி கொலை
மாணவி கொலை

உடனே மாணவியின் பெற்றோர் மருத்துவமனைக்குச் சென்று சிங்கிடம் தங்களது மகள் எங்கே என்று கேட்டனர். அதற்கு உங்களது மகள் என்னைக் கத்தியால் தாக்கிவிட்டு ஓடிவிட்டதாகத் தெரிவித்தார்.

இதனால் மாணவியைப் பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஏற்கனவே மாணவியை சிங் துன்புறுத்தி வந்தார். எனவே மாணவியின் பெற்றோர் கடத்தல் புகார் பதிவு செய்தனர்.

அதன் அடிப்படையில் சிங்கிடம் விசாரித்தபோது மாணவியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் அங்கிட் செளதரி கூறுகையில், ''மாணவியை சிங் தனியாக அழைத்துச் சென்று கழுத்தை நெரித்தும் கத்தியால் குத்தியும் கொலை செய்துள்ளார். அதோடு மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். மாணவியைக் கத்தியால் குத்தியபோது சிங்கிற்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

எனவே தான் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்ந்துள்ளார். மாணவியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாணவி மற்ற வாலிபர்களுடன் பேசியது சிங்கிற்குப் பிடிக்கவில்லை.

இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. எனவே திட்டமிட்டு இக்கொலையைச் செய்துள்ளார்'' என்றார்.

கொலையான மாணவி மற்றும் சிங்
கொலையான மாணவி மற்றும் சிங்

இது குறித்து மாணவியின் தந்தை கூறுகையில், ''இருவரும் பார்ட்டி ஒன்றில் சந்தித்துள்ளனர். அதன் பிறகு அவர்கள் நண்பர்களாகியுள்ளனர். வேறு யாரிடமும் பேசக்கூடாது என்று எனது மகளிடம் சிங் நிர்ப்பந்தம் செய்துள்ளார். இதனால் எனது மகள் 6 மாதத்திற்கு முன்பு சிங்குடனான தொடர்பைத் துண்டித்துக்கொண்டார்.

இருவரிடமும் மீண்டும் சந்தித்துக்கொள்ளாதீர்கள் என்று சொல்லி இருந்தோம். அப்படி இருந்தும் அடிக்கடி சிங் எங்களது வீட்டிற்கு வந்து வாக்குவாதம் செய்வான்.

இது குறித்து அவனது பெற்றோரிடமும் தெரிவித்தோம். அவர்கள் மன்னிப்பும் கேட்டனர். அப்படி இருந்தும் துன்புறுத்தல் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது'' என்று தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

சென்னை: 'தடாவில் தொடங்கிய 'வடை' தகராறு' - மயிலாப்பூரில் நடந்த கொலை முயற்சி; என்ன நடந்தது?

சென்னை, மயிலாப்பூர் பகுதியில் வசித்து வரும் நண்பர்களான 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கடந்த 04.05.2025 அன்று இரவு வீட்டினருகே பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அப்பகுதியைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

சென்னை: லவ் டார்ச்சர்; இளம்பெண் வீட்டில் ரகளை - இளைஞரை கைது செய்த போலீஸ்!

சென்னை, வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அந்தப் பெண்ணின் மூத்த மகளை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கோகுல்குமார் என்ற இளைஞர் காதலித்து வந்திருக்கிறார். அதற்... மேலும் பார்க்க

பீகாருக்கு மாற்றி அனுப்பப்பட்ட திருத்தணி தொழிலாளரின் சடலம்; மருத்துவர் இடமாற்றம்; பின்னணி என்ன?

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா அருகிலுள்ள பி. ஆர். பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). கூலித் தொழிலாளரான இவர், குடும்பத் தகராறில் மதுவில் விஷம் கலந்து குடித்தார்.அதனால் ராஜேந்திரனை அவர... மேலும் பார்க்க

அடுத்தடுத்து மோசடி புகார்; வழக்குபதிவு - சிக்கலில் அதிமுக நிர்வாகி, தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார்?

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார். இவரின் மாமியார் சரஸ்வதி மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருக்கிறார். அசோக் குமாரும் ஆரம்பத்தில் பாஜகவில் இருந்த நிலையில், பிறகு அதிமுகவி... மேலும் பார்க்க

லக்கி பாஸ்கர் பாணியில் மோசடி; வாடிக்கையாளர்களின் பணத்தைத் திருடி பங்குச்சந்தை முதலீடு; பின்னணி என்ன?

ராஜஸ்தான், கோடாவில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் மக்கள் தொடர்பு மேலாளராக இருந்தவர் சாக்‌ஷி குப்தா. இந்த வங்கியில் பணம் டெபாசிட் செய்திருந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது பணத்தை எடுப்பதற்காக வங்கிக்கு வந்தார... மேலும் பார்க்க

"ஆள்மாறாட்டம் செய்து ரூ.7.50 லட்சம் மோசடி" - வெளிநாட்டில் கணவரை இழந்த பெண் ஆட்சியரிடம் புகார்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது: 53). இவர், ஈரோடு மாவட்டம், பெருந்துறையிலுள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனம் வாயிலாக, கனடா சென்றிருந்த நிலையில... மேலும் பார்க்க