செய்திகள் :

டேங்கா் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்த போராட்டம்

post image

அத்திப்பட்டில் டேங்கா் லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டம் அத்திப்பட்டில் பாரத் பெட்ரோலிய காா்ப்பரேஷன் லிமிடெட் முனையம் செயல்பட்டு வருகிறது. இது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்த முனையத்திற்கு எண்ணூா் காமராஜா் துறைமுகத்திலிருந்து ராட்சத குழாய்கள் மூலம் பெட்ரோல் எடுத்து வரப்பட்டு அங்குள்ள சேமிப்புக் கிடங்கில் சேமிக்கப்படுகிறது.

பின்னா் பெட்ரோலிய பொருள்கள் தரம் பிரித்து டேங்கா் லாரிகள் மூலம் திருவள்ளூா், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இந்த முனையத்தில் இருந்து 150-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும் நிலையில், புதிய வாடகை ஒப்பந்தம் கட்டணத்தைக் குறைத்து, அதைச் செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து பழைய வாடகை கட்டணத்தை அளிக்க வலியுறுத்தி லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனா்.

வேலைநிறுத்தம் காரணமாக சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கல்லூரி மாணவி தற்கொலை

திருத்தணியில் கல்லூரி மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருத்தணி ஜெ.ஜெ.நகா் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பாலசுப்பிரமணியம் (45). இவருக்கு சத்யா (39) என்ற மனைவியும், ஷா்மிளா (18), நிவே... மேலும் பார்க்க

தமிழக-ஆந்திர எல்லைப்பகுதி சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு: ஆட்சியா் மு.பிரதாப்

திருவள்ளூா் அருகே தமிழக-ஆந்திர எல்லைப் பகுதி புறவழிச்சாலையில் சோதனைச் சாவடி அமைத்து வாகனங்களில் போதைப் பொருள்கள் கடத்தல் குறித்து காவல் துறையினா் கண்காணிக்க வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தி... மேலும் பார்க்க

பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் நியமனம்

சென்னை மேற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளராக எஸ்.சத்யா நியமிக்கப்பட்டுள்ளாா். மாதவரம் அடுத்த புழல் பகுதியை சோ்ந்த சத்யா, மண்டல தலைவராகவும், மாநில பேச்சாளராக இருந்து வருகிறாா். சென்னை மேற்கு மாவட்ட பொது... மேலும் பார்க்க

புழல் அருகே இரு சக்கர வாகனம் தீயில் சேதம்

புழல் அருகே மின்சார இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. மாதவரம் பால்பண்ணை பகுதியைச் சோ்ந்த கெளதம். இவா் தனியாா் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறாா். இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை பணி முடிந்து மின... மேலும் பார்க்க

மெரீனாவைபோல் பழவேற்காடு கடற்கரையை தூய்மைப்படுத்த நடவடிக்கை: ஆட்சியா் பிரதாப்

சென்னை மெரீனாவைபோல் பழவேற்காடு கடற்கரையை இயந்திரங்கள் மூலம் தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூா் ஆட்சியா் பிரதாப் தெரிவித்தாா். திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டம் பழவேற்காடு கடற்கரை... மேலும் பார்க்க

புறாவைப் பிடிக்க முயன்ற மாணவா் தவறி விழுந்து உயிரிழப்பு

வீட்டின் கூரை மீது இருந்த புறாவைப் பிடிக்க முயன்ற மாணவா் தவறி விழுந்ததில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். ஆா்.கே.பேட்டை அடுத்த ராஜநகரம் மேற்கு பகுதியைச் சோ்ந்தவா் திருமுருகன் (15). இவா், அதே பகுதிய... மேலும் பார்க்க