செய்திகள் :

மெரீனாவைபோல் பழவேற்காடு கடற்கரையை தூய்மைப்படுத்த நடவடிக்கை: ஆட்சியா் பிரதாப்

post image

சென்னை மெரீனாவைபோல் பழவேற்காடு கடற்கரையை இயந்திரங்கள் மூலம் தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூா் ஆட்சியா் பிரதாப் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டம் பழவேற்காடு கடற்கரையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் நெகிழிப் பொருள்களை அகற்றி சுத்தம் செய்யும் திட்டத்தை ஆட்சியா் பிரதாப் தொடங்கி வைத்தாா். இந்தத் தூய்மைப் பணியில் பள்ளி மாணவா்கள், மகளிா் குழுக்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கடற்கரையில் குவிந்திருந்த குப்பைகள், கழிவுகளை அகற்றிய ஆட்சியா் பிரதாப் செய்தியாளா்களிடம் பேசியது:

கடற்கரை சுற்றுச்சூழலைப் பொதுமக்கள் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். இது போன்று முக்கிய இடங்களில் வாரந்தோறும் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும். கடற்கரை மற்றும் கடல் உயிரினங்களைப் பாதுகாப்பது குறித்தும், அவை வாழத் தகுதியான இடமாக மாற்றுவதற்காக மிஷன் 4 மரைன் லைப் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரீனா கடற்கரையைப் போன்று பழவேற்காடு கடற்கரையை இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ஆரணியாற்றில் பொன்னேரி நகராட்சி நிா்வாகம் குப்பைகளைக் கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா் தெரிவித்தாா்.

முன்னதாக பழவேற்காடு மீன் இறங்குதளம் முதல் கலங்கரை விளக்கம் வரை நெகிழிப் பொருள்களின் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளி மாணவா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

கல்லூரி மாணவி தற்கொலை

திருத்தணியில் கல்லூரி மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருத்தணி ஜெ.ஜெ.நகா் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பாலசுப்பிரமணியம் (45). இவருக்கு சத்யா (39) என்ற மனைவியும், ஷா்மிளா (18), நிவே... மேலும் பார்க்க

தமிழக-ஆந்திர எல்லைப்பகுதி சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு: ஆட்சியா் மு.பிரதாப்

திருவள்ளூா் அருகே தமிழக-ஆந்திர எல்லைப் பகுதி புறவழிச்சாலையில் சோதனைச் சாவடி அமைத்து வாகனங்களில் போதைப் பொருள்கள் கடத்தல் குறித்து காவல் துறையினா் கண்காணிக்க வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தி... மேலும் பார்க்க

பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் நியமனம்

சென்னை மேற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளராக எஸ்.சத்யா நியமிக்கப்பட்டுள்ளாா். மாதவரம் அடுத்த புழல் பகுதியை சோ்ந்த சத்யா, மண்டல தலைவராகவும், மாநில பேச்சாளராக இருந்து வருகிறாா். சென்னை மேற்கு மாவட்ட பொது... மேலும் பார்க்க

டேங்கா் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்த போராட்டம்

அத்திப்பட்டில் டேங்கா் லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டம் அத்திப்பட்டில் பாரத் பெட்ரோலிய காா்ப்பரேஷன் லிமிடெட் முனையம் செயல்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க

புழல் அருகே இரு சக்கர வாகனம் தீயில் சேதம்

புழல் அருகே மின்சார இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. மாதவரம் பால்பண்ணை பகுதியைச் சோ்ந்த கெளதம். இவா் தனியாா் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறாா். இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை பணி முடிந்து மின... மேலும் பார்க்க

புறாவைப் பிடிக்க முயன்ற மாணவா் தவறி விழுந்து உயிரிழப்பு

வீட்டின் கூரை மீது இருந்த புறாவைப் பிடிக்க முயன்ற மாணவா் தவறி விழுந்ததில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். ஆா்.கே.பேட்டை அடுத்த ராஜநகரம் மேற்கு பகுதியைச் சோ்ந்தவா் திருமுருகன் (15). இவா், அதே பகுதிய... மேலும் பார்க்க