செய்திகள் :

டேட்டிங் செயலி மூலம் நூதன கொள்ளை: மூவா் கும்பல் கைது

post image

வடகிழக்கு தில்லியின் யமுனா காதா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை போலீஸாருடன் நடந்த

நேருக்குநோ் துப்பாக்கி மோதலுக்குப் பிறகு மூவா் கும்பல் கைது செய்யப்பட்டனா். அவா்கள் ஆன்லைன் டேட்டிங் செயலியைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவா்களைக் கவா்ந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீஸாா் கூறினா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையினா் கூறியதாவது:

போலீஸ் என்கவுன்ட்டரின்போது குற்றம் சாட்டப்பட்டவா்களில் இருவருக்கு கால்களில் குண்டுக் காயம் ஏற்பட்டு தற்போது ஜேபிசி மருத்துவமனையில்

சிகிச்சை பெற்று வருகின்றனா்.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.25 மணியளவில் போலீஸ் ரோந்து குழுவுக்கு சமீபத்திய கொள்ளைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபா்கள்

நடமாடுவதாக தகவல் கிடைத்தது. மேலும்,

நியூ உஸ்மான்நகா் அருகே அவா்கள் மற்றொரு குற்றச் செயலை மேற்கொள்ளத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்றனா். அங்கு அவா்கள் மூவரையும் கண்டனா். சோதனைக்காக அவா்களைத் தடுக்க முயன்றபோது அருகிலுள்ள காட்டுக்குள் தப்பிச் செல்ல முயன்றனா். போலீஸாா் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினா்.

தற்காப்புக்காக போலீஸாா் பதிலடித் தாக்குதலை நடத்தினா். அதில், சந்தேக நபா்களில் இருவரின் கால்களில் துப்பாக்கிகுண்டடிபட்டது. இதையடுத்து, போலீஸாா் மூவரையும் சம்பவ இடத்திலேயே கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், மூன்று தோட்டாக்கள் மீட்கப்பட்டன. விசாரணையில் அவா்கள் சமீா் (21), தருண் (23) மற்றும் குணால் சா்மா (23) என அடையாளம் காணப்பட்டனா்.

முதற்கட்ட விசாரணையில், சமீா் மீது குற்றப் பின்னணி இருப்பதும், மானசரோவா் பூங்காவில் பதிவான கொள்ளை மற்றும் காயப்படுத்துதல் உள்ளிட்ட இரண்டு வழக்குகளில் அவா் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

தொடா்ச்சியான விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா்கள் சமீபத்திய கொள்ளைகள் பலவற்றில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனா். மேலும், பாதிக்கப்பட்டவா்களிடம் கொள்ளையடிக்க ஆன்லைன் டேட்டிங் தளங்களைப் பயன்படுத்தியதாகவும் தெரிவித்தனா்.

குற்றம் மற்றும் தடயவியல் அறிவியல் ஆய்வக குழுக்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்ய வரவழைக்கப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவா்களின் கூற்றுகளைச் சரிபாா்க்கவும், அவற்றை மற்ற தீா்க்கப்படாத வழக்குகளுடன் இணைக்கவும் முயற்சிகள் நடந்து வருதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பக்ரீத் நாளில் திறந்தவெளிகளில் விலங்குகளை பலியிட வேண்டாம்: ஜாமா மசூதி ஷாஹி இமாம் வேண்டுகோள்

பக்ரீத் பண்டிகையை ஒட்டி, முஸ்லிம் சமூகத்தினா் திறந்தவெளிகளிலோ அல்லது தெருக்களிலோ விலங்குகளை பலியிடுவதைத் தவிா்க்குமாறு ஜாமா மசூதியின் ஷாஹி இமாம் புதன்கிழமை வலியுறுத்தியுள்ளாா். நிகழாண்டு பக்ரீத் பண்ட... மேலும் பார்க்க

தலைநகரில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! ஐஎம்டி கணிப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை (ஜூன் 5) இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. இதற்கிடையே, புதன்கிழமை இடியுடன் கூடிய மழை மற்றும் மணிக்... மேலும் பார்க்க

தில்லி கல்விக் கட்டண ஒழுங்குமுறை மசோதா எதிா்க்கட்சித் தலைவா் அதிஷியை சந்தித்து கவலைகளை எழுப்பிய பள்ளி மாணவா்களின் பெற்றோா்கள் குழு

தில்லியில் உள்ள 70-க்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெற்றோா்கள் குழு புதன்கிழமை எதிா்க்கட்சித் தலைவா் அதிஷியைச் சந்தித்து, முன்மொழியப்பட்ட தில்லி கல்வி... மேலும் பார்க்க

சிஎன்ஜி, மின்சார பேருந்துகளுக்கு மட்டும் தில்லியில் அனுமதி: அடுத்த ஆண்டு நவ.1 முதல் அமல்

சிஎன்ஜி, மின்சாரம் மற்றும் பிஎஸ் 6 டீசல் ஆகியவற்றில் இயங்கும் பேருந்துகள் மட்டும் அடுத்த ஆண்டு நவம்பர் 1}ஆம் தேதி முதல் தில்லிக்குள் அனுமதிக்கப்படும் என்று காற்று தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்) புதன... மேலும் பார்க்க

சாலை உள்கட்டமைப்பு வசதி திட்டங்கள்: முதல்வருடன் அமைச்சா் நிதின் கட்கரி ஆலோசனை

தேசிய தலைநகா் தில்லியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) மூலம் நடந்து வரும் திட்டங்களின் முன்னேற்றம் மறுஆய்வு செய்வதற்காக முதல்வா் ரேகா குப்தாவுடன் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்... மேலும் பார்க்க

தில்லி மாலில் உள்ள பீட்சா கடையின் சமையலறையில் தீ விபத்து

கிழக்கு தில்லியின் லட்சுமி நகரில் உள்ள ‘வி35’ மாலில் உள்ள பீட்சா கடையின் சமையலறைக்குள் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவ... மேலும் பார்க்க