செய்திகள் :

'டேய் பாவிகளா... அண்ணன் அன்புமணியிடம் கேளுங்கள்!' - குமுறும் சேலம் பாமக எம்.எல்.ஏ அருள்

post image

பாமகவில் உள்கட்சி விவகாரம் பூதாகரமாகி தந்தைக்கும் - மகனுக்கும் இடையே மிகப்பெரிய பிரச்னை போய்கொண்டிருக்கிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் பாமக தலைவர் அன்புமணியை சாட, அன்புமணி ராமதாஸிடம் மன்னிப்பு கேட்பது என காட்சிகள் நகர்ந்துகொண்டிருக்கின்றன.

நேற்று முன்தினம் (ஜூன் 18) பாமக எம்.எல்.ஏக்கள் அருள் மற்றும் ஜி.கே மணி நெஞ்சுவலி காரணமாக அடுத்தடுத்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களை நேரில் சென்று நலம் விசாரித்து வந்தார் ராமதாஸ்.

இன்னொரு பக்கம், நேற்று சேலம், தருமபுரி என பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார் அன்புமணி.

ராமதாஸ் - அன்புமணி
ராமதாஸ் - அன்புமணி

அண்ணன் அன்புமணியிடம் கேளுங்கள்

இந்த நிலையில், நேற்று சேலம் மேற்கு எம்.எல்.ஏ அருள் தனது எக்ஸ் பக்கத்தில் தொடர்ச்சியாக பதிவிட்டிருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது...

"டேய் பாவிகளா 35 ஆண்டுகளாக பாமகவுக்கு உழைத்து, 18 முறை சிறை கண்டேன். 135 நாட்கள் நானும் ரத்தினமும் சிறையில் இருந்தபோது, மும்பைக்கும், டெல்லிக்கும் ஓடியவர்கள் இன்று மேடையில் வீர வசனம் பேசியதை பார்த்து பலர் ஏளனமாக சிரித்ததை கண்டோம்".

"அச்சிரப்பாக்கம் இடைத்தேர்தலில் அண்ணன் அண்புமணியோடு தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தபோது பிறந்த எனது மகள் டாக்டர் எழிலை 28 நாட்களுக்கு பிறகே முதன்முதலில் பார்த்தேன். அண்ணன் அன்புமணியிடம் கேளுங்கள் அவர் அரசியலில் கால் பதித்த நாள் முதல் உடனிருப்பவன்".

நாடகப் முகநூல் போராளிகளே

"சாதியை, அய்யாவை கொச்சைப்படுத்திய கயவர்களை மெயின் ரோட்டில் துரத்தி துரத்தி விரட்டியவன்…

என்னையும், என் உழைப்பை, என் தியாகத்தையும், தாண்டி இந்த இயக்கத்திற்காக உங்களை அர்ப்பணித்த நாடகப் முகநூல் போராளிகளே ஆதாரத்துடன் வா நேரில் நேரலையில் விவாதிப்போம்..."

"என்னை பொறுத்தவரை மருத்துவர் அய்யாவும் மருத்துவர் சின்னய்யாவும் ஒன்று தான் ... உங்கள் சுய லாபத்திற்காக இருவரையும் பிரிக்காதீர் ...

கண்ணீருடன் ,

அருள் இராமதாஸ் MLA ,

சேலம் மாநகர மாவட்ட செயலாளர் ,

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி."

`நெருக்கடியால் கூட்டணிக்கு வந்துவிடுவேன் என நினைக்கின்றனர்' - திமுக அரசைச் சாடிய ஜெகன்மூர்த்தி

கடந்த ஏப்ரல் மாதம் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள திருவாலங்காடு கலாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். அதைத் தொடர்ந்து இ... மேலும் பார்க்க

'இனி ஒருமுறை கைரேகை வைத்தால் போதும்!' - ரேஷன் கடைகளில் தமிழ்நாடு அரசு கொண்டுவரும் அதிரடி மாற்றம்

இதுவரை தமிழ்நாடு ரேஷன் கடைகளில் PHH மற்றும் PHH AAY அட்டைதாரர்கள் ஒவ்வொரு முறை பொருள்கள் வாங்கும்போதும், இரண்டு முறை கைரேகை பதிவு செய்துகொண்டிருந்தார்கள். ஆனால், இனி இரண்டு கைரேகைகள் தேவையில்லை என்று ... மேலும் பார்க்க

'எனக்கு கூடப் பொறந்தவங்க யாரும் இல்ல; தவிக்கவிட்டுட்டு போறாங்க' - கண்ணீர் விட்டு அழுத திருச்சி சிவா

நண்பரின் இரங்கல் கூட்டத்தில் எம்.பி திருச்சி சிவா கண்ணீர் விட்டு அழுத வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.மறைந்த திமுக மூத்த நிர்வாகியும், எம்.பி திருச்சி சிவாவின் நண்பருமான மிசா ராமநாதனின் புகழஞ்சலி கூட்... மேலும் பார்க்க

திறப்பு விழா நடத்துனா மட்டும் போதுமா முதல்வரே? - நெல்லை ஸ்மார்ட் சிட்டி மார்கெட் அவலம்!

'ஸ்மார்ட் சிட்டி மார்கெட்!'நெல்லையில் புதிதாக கட்டப்பட்டு திறப்பு விழா கண்ட ஸ்மார்ட் சிட்டி மார்கெட், நான்கு மாதங்களுக்கு மேலாகியும் செயல்பாட்டுக்கு வராமல் இருப்பது அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகளையும் ... மேலும் பார்க்க

UPSC, TNPSC, ரெயில்வே..! பாடங்கள், காணொளி, குறிப்புகள் வழங்கும் தமிழ்நாடு அரசு; முற்றிலும் இலவசம்!

அரசு வேலை - எப்போதுமே இந்த வேலைக்கு தனி மவுசு உண்டு. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பேர் இந்த வேலையைப் பெற போட்டித் தேர்வுகளை எழுதுகின்றனர். ஆனால், அனைவராலும் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுவிட முடியாது.... மேலும் பார்க்க

Ooty: இந்தி பதாகை சர்ச்சையில் ஊட்டி ரயில் நிலையம்; கொந்தளிக்கும் நெட்டிசன்கள்! என்ன நடக்கிறது?

நூற்றாண்டு பழைமை வாய்ந்த ரயில் நிலையங்களில் ஒன்றாக இயங்கி வருகிறது நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மலை ரயில் நிலையம். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையத்தை மத்திய அரசின் 'அம்ரித் ... மேலும் பார்க்க