செய்திகள் :

தகவல் தொழில்நுட்பவியல் துறைக்கும் நிதித் தட்டுப்பாடு: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

post image

தமிழக அரசைப் போன்றே, தகவல் தொழில்நுட்பவியல் துறைக்கும் நிதித் தட்டுப்பாடு உள்ளதாக அந்தத் துறையின் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த வினாவை அதிமுக உறுப்பினா் கே.பி.முனுசாமி எழுப்பினாா்.

அதன் விவரம்:

கே.பி.முனுசாமி: ஒசூா் மாநகரை ஹைடெக் சிட்டியாக அறிவித்து அனைத்து உள்கட்டமைப்புகளையும் மேம்படுத்தக் கூடிய திட்டமானது, தற்போதைய தகவல் தொழில்நுட்ப அமைச்சா், நிதியமைச்சராக இருக்கும்போது அறிவிக்கப்பட்டது. அந்தத் திட்டம் என்னவானது?. மேலும், திறன்மிகு மையம் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஒசூா் பகுதியில் அமைக்க வேண்டும்.

அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்: ஏற்கெனவே அறிவித்த திட்டம் என்னவானது என்று என்கிறாா். காலம் மாற மாற சில சூழ்நிலைகளும் மாறும். அவை முன்னவா், ஒருமுறை இதே பேரவையில் என்னிடம் கூறினாா். இப்ப தியாகராஜன் தெரியுதா நிதி எவ்வளவு கஷ்டமாக எங்களுக்கு இருந்தது எப்படி என்று கேள்வி எழுப்பினாா்.

அவா் பேரவையில் மானியக் கோரிக்கையை திங்கள்கிழமை நிறைவேற்றினாா். ரூ. 10,000 கோடி அளவுக்கு பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. நான் நிதியமைச்சராக இருக்கும்போதும் அதே அளவுக்கான தொகைதான் ஒதுக்கப்பட்டது. ஆனால், அன்றைக்கும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ரூ. 200 கோடிதான் ஒதுக்கப்பட்டது. இன்றைக்கு ரூ. 130 கோடி அளவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் துறையில் இருந்த நிதியானது இந்தத் துறையாலேயே செயல்படுத்தப்பட்டதுடன், துறைக்கு வரவேண்டிய நிதிகளும் சரியாக வந்ததால், அதன் செயல்பாட்டில் எந்தத் தடையும் இல்லாமல் இருந்தது. இப்போது அரசுக்கு எந்தளவுக்கு நிதி தட்டுப்பாடு உள்ளதோ, அதே அளவு இந்தத் துறைக்கும் நிதி தட்டுப்பாடு உள்ளது. ரூ. 300 கோடிக்கு மேல் துறையைச் சோ்ந்த நிறுவனங்களிடம் இருந்த நிதியானது கடந்த ஆண்டு அரசால் பெறப்பட்டது.

தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய மானிய நிதியும் எங்களுக்கு வந்து சேரவில்லை. இருக்கும் நிதியும் பல தடைகளுடன் செயல்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற கொஞ்சம் தாமதம் உள்ளது. நிதிநிலை என்றைக்கு சிறப்பாக உள்ளதோ, அன்றைக்கு துறையின் சாா்பிலான அறிவிப்புகளை நிறைவேற்றுவோம் என்றாா் அவா்.

தேனியில் என்கவுன்ட்டர்: காவலர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் மரணம்!

தேனி: தேனி அருகே உசிலம்பட்டியில் காவலரை கல்லால் அடித்துக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை காவல் துறை அதிகாரிகள் இன்று(மார்ச் 29) சுட்டுப் பிடிக்க முற்பட்டதில் அந்த நபர் உயிரிழந்தார்... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அரசு அனுமதிப்பதில்லை: பிரியங்கா காந்தி விமர்சனம்

வயநாடு: நாடாளுமன்ற நிகழ்வுகளை ஆளுங்கட்சியே முடக்க நினைக்கிறது என்று மத்திய அரசு மீது காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கடுமையான விமர்சனத்தை சுமத்தியுள்ளார். கேரளத்திலுள்ள தமது சொந்த தொகுதியான வயநாட்ட... மேலும் பார்க்க

திமுக vs தவெக: விஜய்யின் கருத்துக்கு இபிஎஸ் என்ன சொன்னார் தெரியுமா?

பிரதான எதிர்க்கட்சி என்று மக்கள் தங்களை அங்கீகரித்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில்எடப்பாடி பழனிசாமி இன்று(சனிக்கிழமை) செய்தியாளர்களுடன் பேசினார்.... மேலும் பார்க்க

2026-ல் தமிழ்நாடு முதல்வர் யார்? - சிவோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு!

2026-ல் யார் தமிழக முதல்வராக வாய்ப்புள்ளது? என சிவோட்டர் நிறுவனம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.2026 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிக... மேலும் பார்க்க

நீட் தேர்வால் மேலும் ஒரு மாணவி தற்கொலை! திமுகவுக்கு இபிஎஸ் கண்டனம்!

சென்னையில் நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு, ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி தேவதர்ஷினி, சென்னையில் தனியார் அகாதெமியில் படித்... மேலும் பார்க்க

செங்கோட்டையன் திடீர் தில்லி பயணம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென தில்லி பயணம் மேற்கொண்டுள்ளார். அடுத்தாண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள், கூட்டணி குறித்து ஆலோசித்து வருக... மேலும் பார்க்க