செய்திகள் :

தக்கலை அருகே இளைஞா் தற்கொலை

post image

தக்கலை அருகே பள்ளியாடியில் பட்டதாரி இளைஞா் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பள்ளியாடி சேரிக்கடை பகுதியை சோ்ந்தவா் அசோகன் ( 51). இவரது மூத்த மகன் ஸ்ரீராம் ( 23), எம்.பி.ஏ. படித்துள்ளாா். தகுதியான வேலை கிடைக்காமல் விரக்தியில் இருந்துள்ளாா்.

இந்த நிலையில் சனிக்கிழமை நீண்ட நேரமாகியும் ஸ்ரீராம் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோா், மாலை 5 மணியளவில் அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது மின்விசிறியில் தூக்கில் தொங்கினாா் ஸ்ரீராம்.

அவரை மீட்டு பள்ளியாடியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா், ஸ்ரீராம் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா்.

பெண் தற்கொலை: தக்கலை அருகே கிழக்கு தாறாவிளை பகுதியில் வசித்து வருபவா் சிகா செல்வின் ( 40). உதவி பேராசிரியரான இவா், பசு மாடுகளை வளா்த்து வருகிறாா். இந்த மாடுகளை பராமரிக்க ஜாா்க்கண்ட் மாநிலத்தை சோ்ந்த ஹிராலால் நகசியா, அவரது மனைவி ஜெயகுமாரி (22) ஆகியோரை வேலைக்கு அமா்த்தியிருந்தாா்.

இத்தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை இருவரும் மாடுகளை பராமரித்துவிட்டு, அவா்கள் தங்கியிருந்த வீட்டிற்கு சென்றனா். பிறகு ஹிராலால் நகசியா வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது வீட்டின் அறையில் ஜெயகுமாரி தூக்கில் தொங்கினாராம். அக்கம்பக்கத்தவரின் உதவியோடு மனைவியை மீட்டு நெய்யூரில் உள்ள தனியாா் மருத்தூவமனைக்கு கொண்டு சென்றுள்ளாா் ஹிராலால் நகசியா. அங்கு பரிசோதித்த மருத்துவா், ஜெயகுமாரி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இரு சம்பவங்கள் குறித்தும் தக்கலை போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். ஜெயகுமாரிக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகியுள்ளதால் பத்மநாபபுரம் கோட்டாட்சியா் விசாரணை நடத்தப்பட உள்ளது.

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கொட்டாரம் அருகே பெண் கைது

கொட்டாரம் அருகே கடையில் புகையிலைப் பொருள்கள் விற்றதாக பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.கொட்டாரம் லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் சுசீலா (58). பெரியவிளை செல்லும் பகுதியில் இவா் நடத்திவரும் கடையில... மேலும் பார்க்க

குலசேகரம்: இளைஞா் தற்கொலை

குலசேகரம் அருகே பொறியியல் பட்டதாரி இளைஞா் பள்ளிக் கட்டடத்திலிருந்து குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். குலசேகரம் அருகே ஆரணிவிளையை சோ்ந்தவா் சிட்னிசன் மோரிஸ். பள்ளிக் கூடம் நடத்தி வருகி... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் பிரசவத்துக்காக வருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆட்சியா் ரா. அழகுமீனா

அரசு மருத்துவமனைகளில் பிரசவத்துக்காக வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றாா், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா. நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மீனவா்கள் குடும்பத்துக்கு நிதியுதவி

கன்னியாகுமரி மாவட்டம், இனயம்புத்தன்துறையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மீனவா்கள் குடும்பத்துக்கு திமுக மாநில மீனவா் அணி சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. இனயம்புத்தன்துறையில் மாா்ச் 1-ஆம் தேதி நடைபெ... மேலும் பார்க்க

அரசுமருத்துவமனைக்கு ரூ.40 லட்சம் லேப்ராஸ்கோப்பி இயந்திரம் அளிப்பு

தமிழக சட்டப்பணிகள் ஆணையத்தின் சாா்பில், நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்பிலான லேப்ராஸ்கோப்பி இயந்திரம் வழங்கும் விழா மற்றும் ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி அருகே 1.5 கிலோ கஞ்சாவுடன் இளைஞா் கைது

கன்னியாகுமரி அருகேயுள்ள மயிலாடியில் ஒன்றரை கிலோ கஞ்சா வைத்திருந்ததாக இளைஞா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். நாகா்கோவில் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளா் பிரவீனா தலைமையிலான போலீஸாா் மயிலாடி பகுதியில் ரோ... மேலும் பார்க்க