செய்திகள் :

தக்காளி விலை குறைந்தது! மகிழ்ச்சியில் மக்கள்!

post image

சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று(ஜூலை 7) ஒரே நாளில் ரூ. 15 குறைந்து. ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து காய்கறிகள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன.

கடந்த சில நாள்களாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்ததால், அதன் விலையும் உயர்ந்து காணப்பட்டது.

அதன்படி, கடந்த வாரம் சில்லரை விற்பனைக் கடைகளில் ஒருகிலோ தக்காளி ரூ.60 முதல் ரூ.70 வரையும் மொத்த விற்பனையில் ரூ.50 வரையும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை இன்று(ஜூலை 7) ஒரே நாளில் ரூ. 15 குறைந்து. மொத்த விலையில் ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சில்லரை விற்பனைக் கடைகளில் ரூ. 40 வரை விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக, மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

A kilo of tomatoes, which was sold at wholesale for Rs. 50 in the Koyambedu market in Chennai, fell by Rs. 15 in a one day today (July 7) and is being sold for Rs. 35.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... என்ன மாதிரியான உலகத்தில் வாழ்கிறோம் நாம்?

கணவர் இறந்தது தெரியாமல்..எலி செத்ததாக நினைத்திருந்த மனைவி!

கோவையில் கணவன் இறந்து கிடந்தது தெரியாமல் வீட்டிற்குள் வசித்த மனைவி, துர்நாற்றத்தை எலி செத்ததால் வந்தது என நம்பிய சோக சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.கோவை, தெற்கு உக்கடம் அருகே உள்ள கோட்டை புதூர... மேலும் பார்க்க

விடுதிகளின் பெயர் மாற்றத்தால் மாணவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை: அண்ணாமலை விமர்சனம்

விடுதிகளின் பெயர் மாற்றத்தால் மாணவ, மாணவியருக்கு எந்தப் பயனும் இல்லை என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழகம் முழுவதும் உள்ள மாணவர் விடுதிகள், ம... மேலும் பார்க்க

அஜித்குமார் கொலை வழக்கு: தவெக போராட்டத்துக்கு அனுமதி!

அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக தவெக நடத்தவுள்ள போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால் அண்மையில் அடித்துக் கொல்லப்பட்டாா். இந்த விவக... மேலும் பார்க்க

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் வெள்ளோட்டம்!

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் வெள்ளோட்டம் நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். சேலம் மாநகரின் காவல் தெ... மேலும் பார்க்க

தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின் !

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அழுத்தமான சூழ்நிலையையும் தனது ஒவ்வொரு ... மேலும் பார்க்க

சென்னையில் ஜப்பான் கடற்படை கப்பல்!

சென்னை துறைமுகத்துக்கு ஜப்பான் கடலோரக் காவல்படையின் இஸ்டுகுஷிமா கப்பல் வருகை தந்துள்ளது.சென்னை வருகை தந்துள்ள இஸ்டுகுஷிமா கப்பல் மற்றும் ஜப்பான் கடலோரக் காவல்படையைச் சேர்ந்த வீரர்களை இந்திய கடலோரக் கா... மேலும் பார்க்க