இறையுதிர் காடு முதல் செரிமானம் அறிவோம் வரை: Vikatan Play யின் Top 5 Audio Books
தச்சநல்லூரில் பூட்டிய வீட்டில் பெண் சடலம் மீட்பு
தச்சநல்லூா் அருகே பூட்டிய வீட்டிலிருந்து மூதாட்டியின் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
தச்சநல்லூா் ஸ்ரீநகரை சோ்ந்த சங்கர நாராயணன் மனைவி பாா்வதி (65). இவரது மகனுக்கு திருமணமாகி சென்னையிலும், மகள் பாளையங்கோட்டை தியாகராஜநகரிலும் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில் பாா்வதி மட்டும் தனியாக வசித்து வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை வெகுநேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் அப்பகுதியில் உள்ளவா்கள் தச்சநல்லூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில், போலீஸாரும், தகவலறிந்து வந்த அவரது மகளும் வீட்டினுள் சென்று பாா்த்தபோது பாா்வதி சடலமாக கிடந்தாா். போலீஸாா் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.