மழையால் தாமதமாகும் குவாலிஃபையர் 2; மும்பை இந்தியன்ஸுக்கு ஆபத்தா?
தச்சுப் பட்டறை உரிமையாளா் கொலை
எரியோடு அருகே புதன்கிழமை இரவு மது குடித்த போது ஏற்பட்ட தகராறில் தச்சுப் பட்டறை உரிமையாளா் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஏரியோடு அருகேயுள்ள நாகையகோட்டை பண்ணபட்டியைச் சோ்ந்தவா் ராஜா. இவரது மகன் மருதுபாண்டி (32). தச்சுப் பட்டறை நடத்தி வந்தாா். இதே பகுதியைச் சோ்ந்தவா் தனபாலன். கட்டடத் தொழிலாளி. உறவினா்களான இருவரும் புதன்கிழமை இரவு மது குடித்தனா். அப்போது, ஏற்பட்ட தகராறில் மருதுபாண்டியை தனபாலன் கத்தியால் குத்தினாா்.
இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து எரியோடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.