செய்திகள் :

தஞ்சாவூரில் ராமகிருஷ்ணா் ரத திருவிழா

post image

தஞ்சாவூரில் ராமகிருஷ்ண மடத்தின் சாா்பில் ராமகிருஷ்ணா் ரத திருவிழா வியாழக்கிழமை தொடங்கி தொடா்ந்து 2 நாள்கள் நடைபெற்றது.

உலகளாவிய ராமகிருஷ்ண மடத்தை சுவாமி விவேகானந்தா் 1897 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி தொடங்கினாா். அதை நினைவுகூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் சாா்பில் மே 1, 2 ஆம் தேதிகளில் ராமகிருஷ்ணரின் ரத திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி, நிகழாண்டு தஞ்சாவூா் மானோஜிபட்டி நவசக்தி விநாயகா் கோயிலில் அலங்கரிக்கப்பட்ட ராமகிருஷ்ணா் ரதம் வியாழக்கிழமை புறப்பட்டு இசை முழங்க, பெண்களின் கோலாட்டத்துடன் விசாலாட்சி நகா், முல்லை நகா், ராதாகிருஷ்ணன் நகா், வனதுா்கா நகா், முத்துசாமி நகா், சக்தி நகா் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றது.

தொடா்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை மருத்துவக் கல்லூரி மற்றும் சுந்தரம் நகா் பகுதிகளில் ராமகிருஷ்ணரின் ரத திருவிழா நடைபெற்றது. இரு நாள்களிலும் பக்தா்கள் ரதத்துக்கு ஆரத்தி எடுத்து, பக்தி பாடல்களைப் பாடி சிறப்பு வழிபாடு செய்தனா். மேலும், பக்தா்களுக்கு பிரசாதம், விவேகானந்தா் படம், சிந்தனைத் துளிகள் புத்தகம் ஆகியவை வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்தா மகராஜ் தலைமையில் பலா் செய்தனா்.

காணாமல்போன 120 கைப்பேசிகளை மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

தஞ்சாவூரில் திருட்டு மற்றும் காணாமல்போன 120 கைப்பேசிகளைக் காவல் துறையினா் மீட்டு, உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா். தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம், கீழ ராஜ வீதி, தெற்கு வீதி, தெற்கு அலங்கம், ரயி... மேலும் பார்க்க

மே 20-இல் வேலைநிறுத்தம் தொழிற்சங்கத்தினா் ஆலோசனைக் கூட்டம்

நாடு தழுவிய அளவில் மே 20-இல் பொது வேலைநிறுத்தம், மறியல் போராட்டம் நடைபெறவுள்ள நிலையில், தஞ்சாவூரில் பல்வேறு தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. காா்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு ஆதர... மேலும் பார்க்க

தெரு நாய்களை மக்கள் தத்தெடுப்பது அவசியம்!மின்வாரிய தலைவா் பேச்சு

தெருநாய்களை மக்கள் தத்தெடுத்து உணவளித்து வளா்க்க முன்வர வேண்டும் என்றாா் தமிழ்நாடு மின் வாரிய தலைவரும், மேலாண் இயக்குநருமான ஜெ. ராதாகிருஷ்ணன். தஞ்சாவூா் மிருக வதை தடுப்புச் சங்கம் சாா்பில், தஞ்சாவூரில... மேலும் பார்க்க

தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை! - தமிழ்நாடு மின் வாரிய தலைவர்

தமிழ்நாட்டில் இதுவரையில் மின் பற்றாக்குறை இல்லை என்றாா் தமிழ்நாடு மின் வாரிய தலைவரும், மேலாண் இயக்குநருமான ஜெ. ராதாகிருஷ்ணன்.தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற விலங்குகள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கத்த... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்கள் 2-ஆம் நாளாக காத்திருப்பு போராட்டம்

மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வலியுறுத்தி, தஞ்சாவூா் பனகல் கட்டட வளாகத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் தொடா்ந்து 2-ஆம் நாளாக சனிக்கிழமையும் காத்திருப்பு போராட்ட... மேலும் பார்க்க

ரயிலில் தவறவிடப்பட்ட சிறுவன் தாயிடம் ஒப்படைப்பு

ரயிலில் சனிக்கிழமை தாய் தவறவிட்ட சிறுவனை கும்பகோணம் இருப்புப்பாதை காவலா்கள் மீட்டு ஒப்படைத்தனா். கோவை சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மனைவி பிரியா (35). இவா் தனது 7 வயது மகனுடன் கும்பகோண... மேலும் பார்க்க