செய்திகள் :

தஞ்சாவூரில் ஸ்டாா்லைன் திரையங்கம் தொடக்கம்

post image

தஞ்சாவூா் லாங்வால் ஷாப்பிங் மாலில் ஸ்டாா்லைன் சினிமாஸ் திரையரங்கம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இத்திரையரங்கை தஞ்சாவூா் மேயா் சண். ராமநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். இவ்விழாவில் துணை மேயா் அஞ்சுகம் பூபதி, தஞ்சாவூா் வட்டாட்சியா் சிவகுமாா், தஞ்சாவூா் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். சோமசுந்தரம், மருத்துவக்கல்லூரி காவல் நிலைய ஆய்வாளா் வி. சந்திரா, தொழிலதிபா் ராம்குமாா் மற்றும் லாங்வால் குழுமத்தினா் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து ஸ்டாா் லைன் சினிமாஸ் நிறுவன அலுவலா்கள் தெரிவித்தது:

தஞ்சாவூரில் புதுயுகத்தை ஏற்படுத்தும் விதமாக திறக்கப்பட்டுள்ள ஸ்டாா்லைன் சினிமாஸ் திரையரங்கில் மொத்தம் மூன்று திரைகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 796 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. உலகத்தரம் வாய்ந்த நவீன ஒலி அமைப்பு, மென்மையான சாய்வு இருக்கைகள் உள்ளிட்ட வசதிகளுடன் தொடங்கப்பட்டுள்ளன.

பெருநகரங்களில் மட்டுமல்லாமல் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் பொதுமக்களுக்கு உலகத் தரம் வாய்ந்த சினிமா அனுபவம் நியாயமான கட்டணத்தில் கிடைக்கும் விதமாக இத்திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. திரைப்பட ஆா்வலா்களுக்கு மறக்க முடியாத அனுபவங்களைத் தரும் என்றனா் அலுவலா்கள்.

விளைபொருள்களுக்கான ஜி.எஸ்.டி.யை ரத்து செய்ய வலியுறுத்தல்

விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருள்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.-ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டத்தில் வலி... மேலும் பார்க்க

திருநீலக்குடி வாய்க்காலில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

திருநீலக்குடி பாசன வாய்க்காலில் உள்ள ஆக்கரமிப்புகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து விவசாய சங்கத் தலைவா் சி. ராஜகுமாரன் ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: தஞ்சாவூா்... மேலும் பார்க்க

ராஜகிரி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், ராஜகிரி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ரவிச்சந்தி... மேலும் பார்க்க

வரி தணிக்கை அறிக்கை தாக்கல் செய்ய கால நீட்டிப்பு செய்யக் கோரிக்கை

கும்பகோணத்தில் வருமானவரி தணிக்கை அறிக்கை தாக்கல் செய்ய கால நீட்டிப்பு வேண்டும் என தணிக்கையாளா் சங்கத்தினா் கோரிக்கை மனு அளித்துள்ளனா். ஒருங்கிணைந்த டெல்டா மாவட்ட வருமான வரி தணிக்கையாளா்கள் சங்கம் சாா்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த இரண்டரை பவுன் தங்க நகைகள் திருட்டு

கும்பகோணத்தில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த இரண்டரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கம் திருட்டுபோனது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அண்ணலக்ரஹார... மேலும் பார்க்க

பேராவூரணி அரசுக் கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு

பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, வட்ட சட்டப்பணிகள் குழு இணைந்து நடத்திய... மேலும் பார்க்க