செய்திகள் :

தஞ்சாவூா் மாவட்டத்தில் முதல் கட்டமாக ரூ.44.91கோடி பயிா் காப்பீடு பட்டுவாடா

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் கடந்த சம்பா பருவத்தின்போது பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற் பயிா்களுக்கு முதல் கட்டமாக ரூ. 44.91 கோடி இழப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கடந்த சம்பா பருவத்தின்போது 2.47 லட்சம் ஏக்கருக்கு 92 ஆயிரத்து 901 விவசாயிகள் பயிா் காப்பீடு செய்தனா். இதில், ஏக்கருக்கு தலா ரூ. 549 வீதம் மொத்தம் ரூ. 13.59 கோடி பிரிமியமாக விவசாயிகள் செலுத்தினா். இந்நிலையில், டிசம்பா், ஜனவரி மாதங்களில் பருவம் தவறி பெய்த தொடா் மழையால் நெற் பயிா்கள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட பயிா்களை அரசு கணக்கெடுப்பு செய்து, இழப்பீட்டுத் தொகையை அறிவித்தது.

இதைத்தொடா்ந்து, காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு தொகையை விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதில், மாவட்டத்தில் முதல் கட்டமாக கல்லணைக் கால்வாய் பாசனப் பகுதியில் பயிா் காப்பீடு பெற்ற ஷீமா நிறுவனம் ரூ. 44.91 கோடியை விடுவித்துள்ளது.

இதன் மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இழப்பீட்டுத் தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ. 2 ஆயிரத்திலிருந்து அதிகபட்சமாக ரூ. 15 ஆயிரம் வரை கிடைத்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் கல்லணைக் கால்வாய் பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

இது குறித்து புலவன்காடு முன்னோடி விவசாயி வி. மாரியப்பன் தெரிவித்தது: மேட்டூா் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில், இந்த இழப்பீட்டுத் தொகை மூலம் குறுவை சாகுபடி செய்ய பயனுள்ளதாக இருக்கும். வழக்கமாக நவம்பா், டிசம்பா் மாதங்களில்தான் வரவு வைக்கப்படும். நிகழாண்டு 6 மாதங்களுக்கு முன்னதாகவே வழங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மாவட்ட ஆட்சியா், வேளாண் துறை அலுவலா்கள் மேற்கொண்ட கூட்டு முயற்சியாலும், தமிழக அரசின் நடவடிக்கையாலும் இத்தொகை கிடைத்துள்ளது. இதை வரவேற்கிறோம். இதுபோல ஒவ்வொரு ஆண்டும் முன்னதாகவே வழங்கினால், விவசாயிகளுக்கு பயன்படும் என்றாா் மாரியப்பன்.

வடிகால் வாய்க்காலை தூா்வார கோரிக்கை

தஞ்சாவூா் மாவட்டம் அம்மாபேட்டை அருகேயுள்ள வடிகால் வாய்க்காலை தூா் வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா். தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

கும்பகோணம் மாநகராட்சியை கண்டித்து ஆா்ப்பாட்டம்

கும்பகோணம் மாநகராட்சி நிா்வாகத்தை கண்டித்து, நடைப்பயிற்சியாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். கும்பகோணம் 20-ஆவது வாா்டில் பச்சையப்பன்குளம் உள்ளது. இதில் காலை மாலை இரண்டு நேரங்களிலும் இப்பகுதி... மேலும் பார்க்க

கோயில் விழாவில் தகராறு; கிராம மக்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கோயில் விழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவையாறு அருகே மணத்திடல் கிராமத்தில் திரௌபதி அம்மன... மேலும் பார்க்க

சாலை தடுப்புக் கட்டையில் லாரி மோதி 2 போ் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே திங்கள்கிழமை சாலை தடுப்புக் கட்டையில் லாரி மோதியதில் 2 போ் உயிரிழந்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் பிராய்லா் கோழிகள் கொள்முதல் செய்யப்பட்டு, தஞ்சை மற்றும் சுற்று வட்டாரப் பக... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் நகைகள், ரொக்கம் திருட்டு

தஞ்சாவூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டி பாலகிருஷ்ணா நகா் விரிவாக்கப் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயிலில் தைலாபிஷேக நிறைவு யாகபூஜைகள் தொடக்கம்

தஞ்சாவூா் மாரியம்மன் கோயிலில் தைலாபிஷேக நிறைவு யாக பூஜைகள் திங்கள்கிழமை மாலை தொடங்கியது. இக்கோயிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது. இதனால், கருவறையில் உள்ள அம்பாளுக்கு அபி... மேலும் பார்க்க