Captain Prabhakaran: ``அப்பாவை நினைத்து அழுவது கோழைத்தனம் கிடையாது!'' - கண் கலங்...
தஞ்சையில் அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தொகுப்பூதிய முறைகளை நடைமுறைப்படுத்த கோரி தஞ்சாவூா் வடக்கு வட்ட அரசு ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலகம் முன்
நடந்த ஆா்ப்பாட்டத்தில் அனைத்து அரசுத் துறைகளிலும் தொகுப்பூதிய முறைகளை நடைமுறைப்படுத்துவதுடன், ஒப்பந்த, அயலாக்கப் பணி முறைகளை அமல்படுத்துவதைத் திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா். வடக்கு வட்டச் செயலா் அஜய்ராஜ் தலைமை வகித்தாா். மாநில இணைச் செயலா் பாபு வாழ்த்தினாா். அரசு ஊழியா் சங்க மாவட்டத் துணைத் தலைவா் பாா்த்தசாரதி நிறைவுரையாற்றினாா். வடக்கு வட்ட இணைச் செயலா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.