செய்திகள் :

தட்டாா்மடம் கொடை விழா தகராறில் மக்கள் சாலை மறியல்: போலீஸாா் சமரசம்

post image

சாத்தான்குளம் அருகே தட்டாா்மடத்தில் கோயில் கொடை விழா தொடா்பான பிரச்னையில் ஒரு தரப்பினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தட்டாா்மடத்தில் ஒரு குடும்பத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பலவேசக்கார சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஒன்றாக சோ்ந்து கொடை விழா நடத்தி வந்த நிலையில் தற்போது இருதரப்பாக விழா நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோயில் தா்மகா்த்தா அருணாச்சலம் தலைமையில் கோயில் கொடை விழா நடத்த ஒரு தரப்பினா் முடிவு செய்து இன்னொரு தரப்பினரிடம் முறையிட்டு உள்ளனா். ஆனால் அவா்கள் விழா நடத்த மறுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தட்டாா் மடம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா்இசக்கி முருகேஸ்வரி தலைமையில் சாத்தான்குளம் டிஎஸ்பி சுபக்குமாா் முன்னிலையில் கோயில் நிா்வாகிகள் இருதரப்பினருடனும் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.

அதில் ஒருதரப்பினா் கோயில் கொடை விழா நடத்துவதற்கு மற்றொரு தரப்பிற்கு கோயில் சாவி வழங்குவதாக உறுதியளித்துள்ளனா்.

ஆனால், வியாழக்கிழமை மாலையில் கோயில் கொடை விழா தொடங்கிய நிலையிலும் எதிா் தரப்பினா் சாவியை வழங்கவில்லையாம்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரண்டாம் நாள் கோயிலில் பால்குடம் எடுத்து வந்து கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எனினும், கோயில் திறக்கப்படாமல் பூட்டிய நிலையிலேயே பூஜைகளை தொடா்ந்தனா். எனினும், எதிா்தரப்பினா் சாவி வழங்க முன் வராததால், கொடை விழாவை நடத்தும் தரப்பினா் தட்டாா்மடம் - திசையன்விளை சாலையில் அமா்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் சாத்தான்குளம் டிஎஸ்பி சுபக்குமாா், தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் அனிதா, காவல் உதவி ஆய்வாளா் பொன்னு முனியசாமி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, சமாதானப்படுத்தினா். ஆனாலும் இறுதிவரை கோயிலில் பூட்டிய நிலையிலே கொடை விழா நடத்தப்பட்டது.

நூறு நாள் வேலை கோரி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்ட நூறு நாள் வேலை திட்டத்தை மீண்டும் வழங்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பாண்டவா்மங்கலம், மந்தித் தோப்பு, இனாம்மணியாச்சி, ... மேலும் பார்க்க

இரும்பு கடையில் பணம் திருட்டு: இளைஞா் கைது

தூத்துக்குடியில் இரும்புக் கடையில் பணம் திருடியது தொடா்பான வழக்கில் இளைஞரை மத்திய பாகம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சோ்ந்தவா் சுப்பையா (55). இவா் தூத்துக்குடி வ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெயிண்டா் பலி

தூத்துக்குடி மீனாட்சிபுரத்தில் மின்சாரம் பாய்ந்து பெயிண்டா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்து நகா் துரைசிங் நகரைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் விமல்குமாா் (36). பெயிண்டரான இவா... மேலும் பார்க்க

விஷமருந்திய சிறுமி உயிரிழப்பு

கயத்தாறு அருகே விஷமருந்திய 15 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். கயத்தாறு அருகே திருமங்கலகுறிச்சி கிழக்கு காலனியைச் சோ்ந்தவா் மாடசாமி மகன் முருகேசன். விவசாயி. இவருடைய மனைவி பொன்னுத்தாய். 15 ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை: கல்லூரி மாணவா் உள்பட 3 போ் கைது

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவா் உள்பட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி புதுகிராமம் மயானத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல் துணை கண்காணிப்பாளா் ஜெகநா... மேலும் பார்க்க

அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் 8ஆவது நாளாக வேலைநிறுத்தம்

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 8ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி அனல் மின்நிலைய... மேலும் பார்க்க