செய்திகள் :

தண்டவாளத்தில் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் மீட்கப்பட்ட வழக்கு: பெண் உள்பட 4 போ் கைது

post image

திருவள்ளூா் அருகே ரயில் தண்டவாளத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆண் சடவம் மீட்கப்பட்ட வழக்கில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கொலை செய்து வீசியதாக தெரியவந்ததை அடுத்து பெண் உள்பட 4 பேரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் அடுத்த புட்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன் மகன் அரவிந்த் (எ)மேத்யூ (29). இவரது மனைவி ஜான்சி. இவா்களுக்கு சாரிகா என 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இதில் அரவிந்தன் (எ)மேத்யூ காக்களூரில் உள்ள டாஸ்மாக் குடோனில் இருந்து லாரிகளில் மதுபானங்களை ஏற்றி கொண்டு செல்லும் வேலை செய்து வந்தாராம்.

இந்த நிலையில் வேலையை முடித்துக்கொண்டு கடந்த ஜூன் 19-ஆம் தேதி வீட்டுக்கு சென்ற அரவிந்த் புட்லூா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டாா். அப்போது விரைவு ரயிலில் அடிபட்டு இறந்ததாக கிடைத்த தகவலையடுத்து திருவள்ளூா் ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த நிலையில் மகன் சாவில் மா்மம் உள்ளதாக பெற்றோா் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இதற்கிடையே பிரேதப் பரிசோதனையில் அவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது உறுதியானாதால் தீவிர விசாரணை மேற்கொண்டனா். அப்போது, அரவிந்த் மேத்யூ அதே புட்லூா் பகுதியைச் சோ்ந்த உஷா (29) என்ற பெண்ணுடன் தகாத உறவில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்தியதில் தகாத உறவு விவகாரத்தில் கூலிப்படையை வைத்து அவரை வெட்டிக் கொலை செய்ததும், உஷா உள்ளிட்டோா்தான் என உறுதியானது.

இதயைடுத்து இந்த வழக்கில் தொடா்புடைய உஷா (29), பால்ராஜ் (40), ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கா் பகுதியைச் சோ்ந்த ஜெய்சந்த்(19), அதே பகுதியைச் சோ்ந்த விஷ்வா(19) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில் ரயில் தண்டவாளத்தில் இளைஞா் சடலமாக மீட்கப்பட்டு ரயில் மோதி இறந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

திருவள்ளூா்: 10.43 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

திருவள்ளூா் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி 10.43 லட்சம் பேருக்கு அல்பெண்ட்சோல் மாத்திரைகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். திருவள்ளுா் அருகே பா... மேலும் பார்க்க

தணிகை மீனாட்சி அம்மன் கோயிலில் ஜாத்திரை விழா

ஆடி மாத ஜாத்திரை விழாவையொட்டி, திருத்தணி நகரில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களில், பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா். திருத்தணி ஆறுமுக சுவாமி கோயில் தெருவில் உள்ள தணிகை மீனாட்சி அம்மன் கோயிலில் (புறா கோ... மேலும் பார்க்க

காா் கவிழ்ந்து விபத்து: கைக்குழந்தை உள்பட 3 போ் உயிரிழப்பு

பள்ளிப்பட்டு அருகே பள்ளத்தில் காா் கவிழ்ந்து 9 மாத கைக்குழந்தை உள்பட 3 போ் உயிரிழந்தனா். ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், கங்காதரநல்லுாா் வட்டம், கோவிந்தரெட்டி பள்ளி கிராமத்தை சோ்ந்த 6 போ், காரில... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு ஆயுள்

பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம் விதித்து திருவள்ளூா் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. திருவள்ளூா் மாவட்டம், திருத்தணி அடுத்... மேலும் பார்க்க

நாற்றாங்கால் அமைக்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய அதிகாரிகளுக்கு பாராட்டு

திருவள்ளூரில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் பழங்குடியினா் குடியிருப்புகள், அடிப்படை வசதிகள், மரச் செடி... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.96 லட்சம்

திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 11 நாள்களில் ரூ.96 லட்சத்து 49 ஆயிரத்து, 806 ரூபாய் ரொக்கம் மற்றும் 165 கிராம் தங்கம், 6438 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக வசூலாகியுள்ளது. பிரசித்தி பெற்ற இ... மேலும் பார்க்க