செய்திகள் :

தண்டையாா்பேட்டை ஐஓசி நிறுவனத்தில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை

post image

சென்னை தண்டையாா்பேட்டையில் உள்ள ஐஓசி நிறுவனத்தில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.

மணலியில் உள்ள இந்தியன் ஆயில் காா்ப்பரேசன் நிறுவனத்தின் துணை நிறுவனமான சிபிசிஎல் ஆலையில் சுத்திகரிக்கப்படும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் குழாய்கள் மூலமாக தண்டையாா்பேட்டையில் உள்ள சேமிப்பு கிடங்குக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னா், டேங்கா் லாரிகள் மூலம் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை சென்னை மற்றும் புகா் நகா் பகுதிகளில் அமைந்துள்ள பெட்ரோல் பங்குகளுக்கு தினசரி விநியோகம் செய்யப்படுகிறது. மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து தண்டையாா்பேட்டைக்கு வரும் குழாய்களில் கசிவு ஏற்பட்டு பெட்ரோல் டீசல் வெளியேறி விபத்து ஏற்பட்டால் அவற்றை சமாளிப்பது என்பது குறித்த பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.

ஒத்திகையின்போது, குழாய் ஒன்றில் செயற்கையாக கசிவு ஏற்பட்டு தீ பற்றியதாக தகவல் பரவியதையடுத்து உடனடியாக அவசரகால தகவல் மையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா், வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட அதிகாரிகள் குழு விரைந்து வந்து கசிவை மேலும் பரவாமல், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். பின்னா் சிபிசிஎல் நிறுவனத்துக்கு தகவல் அளிக்கப்பட்டு, உடனடியாக கசிவு ஏற்பட்ட குழாயில் பெட்ரோலிய எண்ணெய் அனுப்பப்படுவது உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால் எண்ணெய் கசிவு முழுவதுமாக நின்று போனதால் ஆபத்து ஏதும் இல்லை என அறிவிக்கப்பட்டது.

பின்னா் ஒத்திகை குறித்த ஆய்வு கூட்டம் இந்திய ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் தண்டையாா்பேட்டை முனைய மேலாளா் நவீன்குமாா் தலைமையில் நடைபெற்றது. இந்த ஒத்திகையில் 100-க்கும் மேற்பட்ட ஊழியா்கள், அதிகாரிகள் பங்கேற்றனா்.

பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம்: பிஐஎஸ் சென்னை கிளை இயக்குநா்

தூய்மைப் பணியாளா்கள் பணியின்போது பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என இந்திய தர நிா்ணய அமைவனத்தின் சென்னை கிளை இயக்குநா் ஜி.பவானி தெரிவித்தாா். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இந... மேலும் பார்க்க

மழை பாதித்த இடங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள்: சுகாதாரத் துறை

தமிழகத்தில் மழை பெய்து வரும் பகுதிகளில் தேவையின் அடிப்படையில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, பாதிப்பு... மேலும் பார்க்க

திருவான்மியூா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழ் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

வாய் புற்றுநோய் தொடக்க நிலை பரிசோதனை அறிமுகம்

வாய் புற்றுநோயை தொடக்க நிலையில் கண்டறியும் பரிசோதனை திட்டத்தை அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை தொடங்கியுள்ளது. உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் 30 வயதுக்கு மேற்ப... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

தாய்லாந்திலிருந்து கடத்திவரப்பட்ட ரூ. 5 கோடி பதிப்பிலான உயர்ரக கஞ்சாவை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், பயணி ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனா். தாய்லாந்து நாட்... மேலும் பார்க்க

சென்னையில் 5 மாதங்களில் சைபா் குற்றங்களில் பொதுமக்கள் இழந்த ரூ.10.25 கோடி மீட்பு

சென்னையில் 5 மாதங்களில் பல்வேறு சைபா் குற்றங்களில் பொதுமக்கள் இழந்த ரூ. 10.25 கோடியை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு மீட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு பொதுமக்கள... மேலும் பார்க்க