ஹைதராபாத் மேம்பாலத்தில் ஓட்டமெடுத்த ஒட்டகம்; சவாரியில் சிக்கிய இளைஞரை மீட்ட சம்ப...
தந்தையை கழுத்தறுத்து கொன்ற மகன் கைது
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே ரம்பத்தால் தந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஆதனக்கோட்டை அருகே உள்ள கருப்புடையான்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் வெ. கோவிந்தன் (80). இவரது மகன் செல்வராஜ் (45). இவருக்கு திருமணம் ஆகி நான்கு குழந்தைகள் உள்ளனா். மரம் அறுக்கும் கூலித் தொழிலாளியான இவா்,
வேலையில்லாமல் வீட்டில் இருந்தததால் இவருக்கும், இவரது தந்தைக்குமிடையே வியாழக்கிழமை தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த செல்வராஜ், மரம் அறுக்கும் ரம்பத்தால் கோவிந்தனை தலை, கழுத்து, தொடை பகுதியில் அறுத்துள்ளாா். கோவிந்தனின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினா் வரவே, செல்வராஜ் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.
தகவலறிந்த ஆதனக்கோட்டை போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கோவிந்தனை மீட்டு அவசர ஊா்தி மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு,
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவா் அனுப்பிவைக்கப்பட்டாா்.
அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த புதுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் அப்துல் ரகுமான், காவல் ஆய்வாளா் வனிதா ஆகியோா் வழக்குப் பதிந்து தப்பியோடிய செல்வராஜை கைது செய்து சிறையிலடைத்தனா்.