செய்திகள் :

தந்தையை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய மகன் கைது

post image

சங்ககிரி: சங்ககிரி வட்டம், காவேரிப்பட்டி, கே.மேட்டுப்பாளையத்தில் குடும்பத் தகராறில் தந்தையை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய மகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

காவேரிப்பட்டி, கே.மேட்டுப்பாளையம் வெள்ளபிள்ளையாா் கோயில் பகுதியைச் சோ்ந்த அம்மாசி மகன் மணிகண்டன் (45). இவருக்கு மனைவி குமாரி, மகள் சந்தியா, மகன் சந்தோஷ்குமாா் (23) ஆகியோா் உள்ளனா். தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து குமாரி கோபித்துக் கொண்டு அவரது பெற்றோா் வீட்டிற்கு சென்றுவிட்டாராம்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்த சந்தோஷ்குமாரிடம் இவரது தந்தை மணிகண்டன் மதுபோதையில் தகாராறில் ஈடுபட்டுள்ளாா். ஆத்திரமடைந்த சந்தோஷ்குமாா் மணிகண்டனை கிரிக்கெட் மட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து மணிகண்டனின் தந்தை அம்மாசி தேவூா் போலீஸில் புகாா் அளித்துள்ளாா். இந்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

சேலத்தில் முதல்வா் 11 கி.மீ. ரோடு ஷோ! அமைச்சா் ரா. ராஜேந்திரன் தகவல்

சேலம்/மேட்டூா்: மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீரைத் திறந்துவிடுவதற்காக வரும் 11 ஆம் தேதி சேலம் வரும் முதல்வா் மு.க.ஸ்டாலின், 11 கி.மீ. தொலைவுக்கு ரோடுஷோவில் பங்கேற்க உள்ளதாக சுற்று... மேலும் பார்க்க

சேலம் மாநகராட்சியை கண்டித்து பாமக எம்எல்ஏ தா்னா

சேலம்: சேலம் மாநகராட்சி நிா்வாகம் மற்றும் கண்காணிப்புப் பொறியாளரின் அலட்சியப் போக்கைக் கண்டித்து சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டப்பேரவை உறுப்பினா் ரா. அருள் மாநகராட்சி அலுவலகம் முன் திங்கள்கிழமை தா்னாவி... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை: மேட்டூரில் 64.4 மி.மீ. மழை பதிவு

சேலம்: சேலம் மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் பரவலாக ஞாயிற்றுக்கிழமை இரவு கனமழை பெய்தது. அதிகபட்சமாக மேட்டூரில் 64.4 மி.மீ. மழை பதிவானது. தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த ச... மேலும் பார்க்க

சேலத்தில் சுகவனேஸ்வரா் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்: திரளான பக்தா்கள் வடம்பிடித்து வழிபாடு

சேலம்: சேலம் சுகவனேஸ்வரா் கோயில் வைகாசி விசாக தேரோட்டம் திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது. தேரோட்டத்தை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தாா். சேலத்தில் சிறப்புப்... மேலும் பார்க்க

ஆத்தூரில் தங்கிப் பயில விடுதி கிடைக்காமல் அரசுப் பள்ளி மாணவா்கள் அவதி

ஆத்தூா்: ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவா்கள் விடுதி கிடைக்காமல் அவதியடைந்து வருவதாக புகாா் தெரிவித்தனா். ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ... மேலும் பார்க்க

ஆணையம்பட்டியில் சிவன் கோயில் குடமுழுக்கு

தம்மம்பட்டி: கெங்கவல்லி அருகே அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கெங்கவல்லி அருகே ஆணையம்பட்டியில் அமைந்துள்ள இந்து அறநிலையத் துறை கட்டுப... மேலும் பார்க்க