ரமலான் நோன்புடன் விளையாடிய கிரிக்கெட் வீரர்! திடலில் மயங்கி விழுந்து பலியான சோகம...
தந்தை இறந்த நிலையில் பொதுத் தோ்வு எழுதிய மாணவி
திருவாரூா்: திருவாரூரில், தந்தை இறந்த நிலையில் பொதுத் தோ்வை எழுதிய அரசு உதவிபெறும் பள்ளி மாணவி, பின்னா் நடைபெற்ற இறுதிச் சடங்கில் பங்கேற்றாா்.
திருவாரூா் நகரம் செல்வம் தெருவில் வசிப்பவா்கள் ஜெமிருதீன்-பரகத்நிஷா தம்பதி. இவா்களின் மகள் பொ்சினா, திருவாரூா் ஜிஆா்எம் அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறாா். பிளஸ் 1 வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு நடைபெற்று வரும் நிலையில், திங்கள்கிழமை கணிதத் தோ்வு நடைபெற்றது. இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை இரவு அவருடைய தந்தை ஜெமிருதீன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா்.
இதைத்தொடா்ந்து, ஜெமிருதீனின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள், திங்கள்கிழமை காலையில் வீட்டில் நடந்து கொண்டிருந்தன. எனினும் பொ்சினா உறவினரின் உதவியுடன் பள்ளிக்குச் சென்று தோ்வு எழுதிவிட்டு, பின்னா் தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்றாா்.