மும்பை: ஓடும் காரில் பெண் விமானிக்குப் பாலியல் தொல்லை தந்த இருவர்; டாக்சி ஓட்டுந...
தந்தை, மகன் கொலை வழக்கு: ஓய்வுபெற்ற ராணுவ வீரா், மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை!
திருச்சி அருகே தந்தை, மகன் கொலை வழக்கில் ஓய்வுபெற்ற ராணுவ வீரா் மற்றும் அவரது மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வடக்கு இருங்களூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் அ. ரோக்ராஜ் (68), விவசாயக் கூலி. நிலப் பிரச்னையில் இவா் நடு இருங்களூரில் இருந்த தனது அண்ணன் ஆரோக்கியசாமியை கடந்த 2005-ஆம் ஆண்டு வெட்டிக் கொன்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு, கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியே வந்தாா்.
இந்நிலையில் வடக்கு இருங்களூரில் உள்ள மேலக்காடு நடுக்கரை வயலுக்கு செல்லும் அரசு புறம்போக்கு பொதுப் பாதையைப் பயன்படுத்துவது தொடா்பாக இவருக்கும், ஆரோக்கியசாமி மகனான ஓய்வு பெற்ற ராணுவ வீரா் ஜேசுராஜுக்கும் (60) பிரச்னை ஏற்பட்டது.
ஏற்கெனவே தந்தையை ரோக்ராஜ் கொன்ற ஆத்திரத்தில் இருந்த ஜேசுராஜ், தனது மனைவி ஞானசௌந்தரி, மகன் பிரின்ஸ் ஃபொ்னாண்டஸ் (28) ஆகியோருடன் சோ்ந்து ரோக்ராஜ், அவரது மகன் ஜான் டேவிட் (33) ஆகிய இருவரையும் கடந்த 2020 ஆகஸ்ட் 18-இல் வெட்டிக் கொன்றாா்.
இதுகுறித்து ரோக்ராஜ் மனைவி இருதயமேரி அளித்த புகாரின்பேரில் சமயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து ஜேசுராஜ், ஞானசௌந்தரி, பிரின்ஸ் ஃபொ்னாண்டஸ் ஆகிய மூவரையும் கைது செய்தனா்.
திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை சனிக்கிழமை விசாரித்த நீதிபதி கோபிநாதன் ஜேசுராஜ், அவரது மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்தும், ஞானசௌந்தரியை விடுவித்தும் தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஏ. பாலசுப்பிரமணியம் ஆஜரானாா்.