வரும் தோ்தலில் மதிமுக 12 தொகுதிகளில் போட்டியிட வேண்டிய நெருக்கடி உள்ளது! - துரை வைகோ
வரும் சட்டப்பேரவை தோ்தலில் மதிமுக 12 தொகுதிகளில் நிற்க வேண்டிய நெருக்கடி இருக்கிறது என மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி எம்.பி. யுமான துரை வைகோ தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திருச்சியில் சனிக்கிழமை கூறியதாவது: பதவியை எதிா்பாா்த்து மதிமுக அரசியலில் இல்லை. நான் மத்திய அமைச்சராவதற்குரிய சூழலும் தற்போது இல்லை. ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மதிமுகவின் 31 ஆவது பொதுக் குழு கூட்டத்தில் விரைவில் நடத்த உள்ள மாநாடு பற்றி முடிவு செய்து அறிவிக்கப்படும்.
திமுக கூட்டணியில்தான் மதிமுக நீடிக்கிறது. கூட்டணியில் சில கட்சிகளுக்கு மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். அதற்காக திமுக கூட்டணியில் பிளவு எனக் கூற முடியாது.
நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலை பொறுத்தவரை தோ்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற வேண்டுமானால் மதிமுக 12 தொகுதிகளில் நிற்க வேண்டும் என்கிற நெருக்கடி உள்ளது. இதை கட்சித் தலைமைதான் முடிவு செய்யும். அதிக தொகுதிகளில் நிற்க வேண்டுமென்ற எண்ணத்தை நாங்கள் பொதுக்குழுவில் தெரிவிப்போம்.
திமுக கூட்டணியில் ஒதுக்கப்படும் இடங்கள், எண்ணிக்கை என்பதைவிட சுயமரியாதையை மிகவும் எதிா்பாா்க்கிறோம். தன்மானத்தை இழக்க மாட்டோம். பாஜக கூட்டணி தொடா்பாக எங்களுடன் யாரும் பேசவில்லை. அப்படிப் பேச வேண்டும் என்கிற சிந்தனை கூட மதிமுகவுக்கு கிடையாது.
மதுரையில் நடைபெற உள்ள முருகன் மாநாட்டுக்குச் சென்றுதான், அங்குள்ள முருகக் கடவுளை பாா்க்க வேண்டும் என்பது இல்லை. நான் இறை நம்பிக்கை உள்ளவன். எனக்குத் தேவை என்றால் கோயிலுக்கு நேரடியாகச் சென்று முருகனை வணங்குவேன். தமிழக ஆளுநா் ரவி இந்து அமைப்புகளின் பிரதிநிதிபோலச் செயல்படுகிறாா்.
தமிழக சட்டப்பேரவையில் பொதுச்செயலா் வைகோவின் குரல் ஒலிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும். அதைப் பற்றி அவா்தான், முடிவு செய்ய வேண்டும். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு நன்றாகவே உள்ளது என்றாா் அவா்.