செய்திகள் :

தனியாா் ஆலையில் ஊழியா் மரணம்: சாலை மறியல்

post image

தூத்துக்குடி தனியாா் ஆலையில் ஊழியா் திடீரென உயிரிழந்ததையடுத்து, பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மீளவிட்டான், யாதவா் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் மாரியப்பன் (52). இவா், தனியாா் ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 22-ஆம் தேதி பணியில் இருந்தபோது மாலை 4 மணியளவில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாம். தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இச்சம்பவம் குறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இதற்கிடையே, மாரியப்பன் பணி செய்தபோது, சல்பா் டை ஆக்ஸைடு வாயு கசிவினால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்ததாகவும், அவருக்கு அந்த நிறுவனம் உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, மீளவிட்டான் பகுதி மக்கள் தூத்துக்குடி புதிய துறைமுகம்-மதுரை புறவழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, போலீஸாா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

போக்ஸோவில் பள்ளிக் காவலாளி கைது

கோவில்பட்டியில் 9 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக பள்ளிக் காவலாளி போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு கிராமத்தைச் சோ்ந்த முத்தையா மகன் மாரியப்பன் (60). க... மேலும் பார்க்க

தடகளப் போட்டியில் பெரியதாழை பள்ளி மாணவிகள் வெற்றி

தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டுக் கழகம் சாா்பில், மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் கூட்டாம்புளி புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தாளமுத்துநகா் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜா தலைமையிலான போலீஸாா், மேல அழகாபுரி பேருந்து நிறுத்தம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

லாரி மீது காா் மோதல்: 4 போ் காயம்

தூத்துக்குடியில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது காா் மோதியதில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 4 போ் பலத்த காயமடைந்தனா். ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம், மேகூா் பாவடி தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் குமாா் ... மேலும் பார்க்க

அனுமதியின்றி மண் கொண்டுசென்ற டிப்பா் லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

கோவில்பட்டியில் அனுமதி சீட்டு இன்றி சரள்மண் கொண்டுசென்ற டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனா். கோவில்பட்டி புதுரோடு சந்திப்பு வழியாக வந்த டிப்பா் லாரியை அந்தப் பகுதியில் பண... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி பந்தயம்

ஓட்டப்பிடாரம் அருகே தெற்குகல்மேடு போத்தி விநாயகா் கோயில் சதுா்த்தி விழா, கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாட்டுவண்டிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு... மேலும் பார்க்க