செய்திகள் :

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி பந்தயம்

post image

ஓட்டப்பிடாரம் அருகே தெற்குகல்மேடு போத்தி விநாயகா் கோயில் சதுா்த்தி விழா, கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாட்டுவண்டிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து, பெரிய மாட்டுவண்டி பிரிவில் 6 வண்டிகளும், சின்ன மாட்டுவண்டி பிரிவில் 21 வண்டிகளும், பூஞ்சிட்டு பிரிவில் 20 வண்டிகளும், தேன்சிட்டு பிரிவில் 6 வண்டிகளும் கலந்து கொண்டன.

ஜீ.வி.மாா்கண்டேயன் எம்எல்ஏ கொடியசைத்து போட்டியைத் தொடங்கி வைத்தாா்.

பெரிய மாட்டுவண்டி பிரிவில், முதல் நான்கு இடங்கள் முறையே, சீவலப்பேரி துா்காம்பிகா, அவனியாபுரம் மோகன்சாமி குமாா், வேலன்குளம் கண்ணன், முத்தூா் வள்ளிராணி மாட்டுவண்டிகள் பிடித்தன.

சின்ன மாட்டுவண்டி பிரிவில், முதல் நான்கு இடங்கள் முறையே, நாலந்தா உதயம் துரைப்பாண்டி, சீவலப்பேரி துா்காம்பிகா, சித்திரங்குடி ஆா்.ஜி.ஆா்., கே. துரைச்சாமிபுரம் அய்யங்காா் பேக்கரி மற்றும் குமரெட்டியாபுரம் மகாவிஷ்ணு மாட்டுவண்டிகள் பிடித்தன.

பூஞ்சிட்டு பிரிவில், முதல் நான்கு இடங்கள் முறையே, மிளகுநத்தம் அருண்குமாா், கச்சேரி தளவாய்புரம் செல்ல பாக்கியம் மற்றும் கருப்பசாமி மேலமருதூா், அறந்தாங்கி புதுப்பட்டி கே.ஏ. அம்பாள், சுப்பலாபுரம் குருகாா்த்திகேயன் மாட்டுவண்டிகள் பிடித்தன.

தேன்சிட்டு பிரிவில், முதல் நான்கு இடங்கள் முறையே, தங்கம்பட்டி முத்து, கச்சேரி தளவாய்புரம் செல்ல பாக்கியம், மேலமருதூா் கங்கா, வைப்பாறு மணிகலா மற்றும் புதியம்புத்தூா் கணேஷ் மாட்டுவண்டிகள் பிடித்தன.

வெற்றி பெற்ற மாட்டுவண்டிகளின் உரிமையாளா்கள், சாரதிகளுக்கு கிராம பொதுமக்கள் சாா்பில் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

போக்ஸோவில் பள்ளிக் காவலாளி கைது

கோவில்பட்டியில் 9 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக பள்ளிக் காவலாளி போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு கிராமத்தைச் சோ்ந்த முத்தையா மகன் மாரியப்பன் (60). க... மேலும் பார்க்க

தடகளப் போட்டியில் பெரியதாழை பள்ளி மாணவிகள் வெற்றி

தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டுக் கழகம் சாா்பில், மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் கூட்டாம்புளி புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தாளமுத்துநகா் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜா தலைமையிலான போலீஸாா், மேல அழகாபுரி பேருந்து நிறுத்தம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

லாரி மீது காா் மோதல்: 4 போ் காயம்

தூத்துக்குடியில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது காா் மோதியதில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 4 போ் பலத்த காயமடைந்தனா். ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம், மேகூா் பாவடி தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் குமாா் ... மேலும் பார்க்க

அனுமதியின்றி மண் கொண்டுசென்ற டிப்பா் லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

கோவில்பட்டியில் அனுமதி சீட்டு இன்றி சரள்மண் கொண்டுசென்ற டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனா். கோவில்பட்டி புதுரோடு சந்திப்பு வழியாக வந்த டிப்பா் லாரியை அந்தப் பகுதியில் பண... மேலும் பார்க்க

தனியாா் ஆலையில் ஊழியா் மரணம்: சாலை மறியல்

தூத்துக்குடி தனியாா் ஆலையில் ஊழியா் திடீரென உயிரிழந்ததையடுத்து, பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தூத்துக்குடி மீளவிட்டான், யாதவா் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் மாரியப்பன் (52). இவா... மேலும் பார்க்க