செய்திகள் :

கோவையில் வனத் துறையினர் வாகனத்தை தாக்கி கண்ணாடியை உடைத்த காட்டு யானை

post image

கோவையில் வனத் துறையினர் வாகனத்தை ஆவேசமாக தாக்கி கண்ணாடியை உடைத்த ஒற்றைக் காட்டு யானையால் பரபரப்பு நிலவியது.

கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியே வந்த காட்டு யானை அப்பகுதியில் முகாமிட்டு விலை நிலங்களை சேதப்படுத்தியது.

தகவல் அறிந்து வந்த போளுவாம்பட்டி வனத் துறையினர் காட்டு யானையை கண்காணித்து அதிகாலையில் அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்நிலையில் தேவராயபுரம் மகாலட்சுமி கோயிலுக்கு செல்லும் ஒத்தையடி பாதை வழியாக ஜீப்பில் காட்டு யானையை விரட்டிக் கொண்டு சென்று உள்ளனர். ஒரு கட்டத்தில் காட்டு யானை நின்று வனத் துறையின் வாகனத்தை பார்த்து ஆவேசமாக ஓடி வந்து இடித்து தள்ளியது.

தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

அதில் வண்டியின் முன் கண்ணாடி உடைந்து சிதைந்தது. சுதாகரித்துக் கொண்ட வனத் துறையினர் வாகனத்தை பின்னே எடுத்துச் சென்று உயிர் தப்பினர்.

காட்டு யானை விரட்டுச் சென்ற வனத் துறையினர் வாகனத்தை யானை ஆக்ரோஷமாக தாக்கும் விடியோ அப்பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

There was a stir in Coimbatore after a lone wild elephant furiously attacked a forest department vehicle.

பாஜகவினரின் அறிவு நாளுக்குநாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது: சு. வெங்கடேசன்

அனுமன்தான் முதல் விண்வெளி வீரர் என்று மத்திய முன்னாள் அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியதற்கு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத்திய முன்னாள் அமைச்சரும் தற்... மேலும் பார்க்க

சென்னையில் இதழியல் கல்வி நிறுவனத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை கோட்டூர்புரத்தில் தமிழக அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) தொடங்கிவைத்தார். சென்னை கோட்டூர்புரத்தில் தமிழ்நாடு அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனம... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப் வழியாக அரசு சேவைகள்: தொடக்கி வைத்தார் மேயர் பிரியா!

சென்னை: தமிழக அரசின் 50 சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக மக்கள் பயன்படுத்தும் திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்பின்படி, வாட்ஸ்ஆப் வழியாக அரசு சேவை வழங... மேலும் பார்க்க

விருத்தாசலம் அருகே பூவனூர் தண்டவாளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன் ! 8 மாணவர்கள் காயம்

பூவனூரில் ரயில் தண்டவாளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் 8 மாணவர்கள் காயமடைந்தனர்.விருத்தாசலம் அருகே பூவனூரில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இ... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

வாரத்தின் முதல் நாளான இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சரிவைச் சந்தித்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.74,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கிராமுக்கு... மேலும் பார்க்க

சென்னையில் போக்குவரத்து எஸ்எஸ்ஐ தற்கொலை!

சென்னை தண்டையார் பேட்டை போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சிவக்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.சென்னை எச்3 தண்டையார் பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தின் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுர... மேலும் பார்க்க