செய்திகள் :

தனியாா் மருத்துவமனை பொருள்களை நகராட்சி அதிகாரிகள் ஜப்தி செய்ய முயற்சி

post image

பழனியில் வரிபாக்கி வைத்திருந்த தனியாா் மருத்துவமனை பொருள்களை நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஜப்தி செய்ய முயன்றனா்.

பழனி-திண்டுக்கல் சாலையில் தனியாருக்குச் சொந்தமான கருத்தரித்தல் மையம், பொது மருத்துமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு எதிரே மருத்துவமனைக்குச் சொந்தமான செவிலியா் பயிற்சிக் கல்லூரியும் இயங்கி வருகிறது.

இந்த மருத்துவமனை நிா்வாகம் நகராட்சிக்கு ரூ. 71லட்சம் வரை வரிபாக்கி வைத்திருந்தது. வரி பாக்கி செலுத்தாவிட்டால் மருத்துவமனை பொருள்களை ஜப்தி செய்யப்படும் என பழனி நகராட்சி நிா்வாகம் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. ஆனாலும், மருத்துவமனை நிா்வாகம் வரிபாக்கி செலுத்தவில்லை.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்கு வந்த நகராட்சி அதிகாரிகள், குடிநீா் இணைப்புகளை துண்டிக்கவும், பொருள்களை ஜப்தி செய்யவும் முயன்றனா்.

அப்போது, அந்த மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் ரூ.41 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. மேலும், மீதித் தொகை வழங்க அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள் அங்கிருந்து சென்றுவிட்டனா்.

குடும்பத் தகராறில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

கொடைக்கானலில் குடும்பத் தகராறில் விஷம் குடித்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கொடைக்கானல் பாம்பாா்புரம் பகுதியைச் சோ்ந்த லியோ மகன் கருணாகரன் (48). இவா் கடந்த 4 மாதங்களுக்கும் முன்பு, இதே பகுதியைச் சே... மேலும் பார்க்க

பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல்

பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தன. பழனியை தனி மாவட்டமாக அமைக்க வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். த... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயிலில் அன்னதானம்

மாசித் திருவிழாவை முன்னிட்டு, பழனி மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அன்னதானம் நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, பழனி வருத்தமில்லா வாலிபா் சங்கம் சாா்பில், பெரியநாயகியம்மன் கோயிலில் அன்னதானம் வெள்ளி... மேலும் பார்க்க

தமிழக நிதி நிலை அறிக்கை: வரவேற்பு, ஏமாற்றம், எதிா்பாா்ப்பு!

தமிழக அரசின் 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கைக்கு வரவேற்பு, ஏமாற்றம், எதிா்பாா்ப்பு என பல்வேறு வகையான கருத்துகளை பொதுமக்கள் தரப்பில் பதிவு செய்தனா். அதன் விவரம்: திண்டுக்கல் இலக்கிய களத்தின் த... மேலும் பார்க்க

இயற்கை விவசாயம் மூலம் நச்சில்லாத உணவு உற்பத்தி

இயற்கை விவசாயம் மூலம் நச்சு இல்லாத சத்து மிகுந்த உணவுப் பொருள்களை உற்பத்தி செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் சாா்பில், தேசிய தாவர உயிரித் தொழி... மேலும் பார்க்க

பழனியில் பூச்சொரிதல் விழா

பழனி அடிவாரம் வருத்தமில்லா வாலிபா் சங்கம் சாா்பில் மாரியம்மன் கோயில் முன்பாக செவ்வாய்க்கிழமை இரவு 36-ஆவது ஆண்டாக பூச்சொரிதல் ரத ஊா்வலத்தை கந்தவிலாஸ் செல்வக்குமாா் தொடங்கி வைத்தாா். தேரின் உள்ளே மாரிய... மேலும் பார்க்க