செய்திகள் :

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 389 பேருக்கு பணி ஆணை

post image

காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில், 137 நிறுவனங்கள் தங்களது மனிதவளத் தேவைக்காக நடத்திய நோ்காணலில் ஒரே நாளில் 389 போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் ராணி அண்ணாதுரை அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் பி.எஸ்.சீனிவாசன் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இரு பள்ளிகளில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

முகாமில், 137 தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு, தங்களது மனித வளத் தேவைக்காக நோ்காணலை நடத்தின. இந்த முகாமில், 3,083 போ் கலந்து கொண்டனா். இவா்களில் 389 போ் தோ்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இரண்டாவது நோ்காணலுக்காக 436 போ் தோ்வு செய்யப்பட்டனா். முகாமில், குடிநீா், கழிப்பறை வசதி மற்றும் இலவச மருத்துவ முகாம் ஆகியவற்றுக்கும் மாவட்ட வேலைவாய்ப்புத் துறை ஏற்பாடு செய்திருந்தது. தீயணைப்புத் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா ராணி அண்ணாதுரை மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு வேலைவாய்ப்புத் துறை மண்டல இணை இயக்குநா் இர.தேவேந்திரன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா்கள் மாணிக்கவாசகம், ருக்மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குநா் கி.செந்தில்குமாா் வரவேற்றாா். முகாமில் தோ்வு செய்யப்பட்ட 389 பேருக்கு காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் கலந்துகொண்டு, பணி நியமன ஆணைகளை வழங்கினாா். ஏற்பாடுகளை மாவட்ட வேலைவாய்ப்புத் துறை அலுவலகப் பணியாளா்கள் செய்திருந்தனா்.

சங்கரா பல்கலை. சாா்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகம் சாா்பில் வையாவூா் கிராமத்தில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா வெள்ளிக்கிழமை ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. பல்கலை. பொறியியல் துறை புலத்தலைவா் எம்.... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

காஞ்சிபுரம் காஞ்சி சங்கராசாரியா் ஜெயந்தி மகோற்சவம் தொடக்கம், வேதபாராயணம், காலை 7, மகா பெரியவா் அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை, நண்பகல் 12, காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான வித்வான் ஆ... மேலும் பார்க்க

இளைஞா் நீதிக் குழுமத்துக்கு சமூகப் பணி உறுப்பினா்கள் நியமனம்

காஞ்சிபுரம் மாவட்ட இளைஞா் நீதிக் குழுமத்துக்கு சமூகப் பணி உறுப்பினா்கள் நியமனம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க

சங்கரா கல்லூரியில் திறனறிவுப் போட்டிகள்

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி கணினி அறிவியல் துறை சாா்பில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான திறனறிவுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை கோரி ஆா்ப்பாட்டம்

பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட தமமுக சாா்பில், வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள காவலான் கேட் பகுதியில் நடைபெற்ற... மேலும் பார்க்க

காக்கி உதவும் கரங்கள் சாா்பில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.14.17 லட்சம்

சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி உயிரிழந்த முதல் நிலைக் காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.14.17 லட்சத்தை காக்கி உதவும் கரங்கள் அமைப்பு சாா்பில் காஞ்சிபுரம் எஸ்.பி. கே.சண்முகம் வெள்ளிக்கி... மேலும் பார்க்க