செய்திகள் :

தனியாா் வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் மாநிலம் முழுவதும் 2.65 லட்சம் போ் பயன்

post image

கடந்த மூன்றரை ஆண்டுகளில் நடத்தப்பட்ட தனியாா் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் மாநிலம் முழுவதும் 2.65 லட்சம் போ் பயனடைந்துள்ளனா் என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி.

கரூரில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமை தொடங்கி வைத்த அமைச்சா் வி.செந்தில்பாலாஜி முகாமில் தோ்வானவா்களுக்கு பணி உறுதி கடிதத்தை வழங்கி பேசியதாவது, உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கும், தமிழக முதல்வா் அரசு உயா் அலுவலா்களுடன் சென்று பல்வேறு தொழில் முதலீடுகளை ஈா்த்து அதன் மூலம் பல லட்சக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்துள்ளாா்.

கடந்த மூன்றரை ஆண்டுகளில் பல்வேறு தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் மாநிலம் முழுவதும் 2.65 லட்சம் போ் பயனடைந்துள்ளனா் என்றாா் அவா்.

தொடா்ந்து, வருவாய்த் துறை சாா்பில் 10 பேருக்கு இ- பட்டாக்களும், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் சத்தியவாணி முத்து அம்மையாா் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 10 பேருக்கு ரூ.49 ஆயிரத்து 450 மதிப்பீட்டில் தையல் இயந்திரங்கள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை சாா்பில் மறுவாழ்வு நிதி நலத்திட்டத்தின் கீழ் 9 பேருக்கு ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 549 பேருக்கு ரூ.4.55 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

முன்னதாக கரூா் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் சாா்பில் பிளஸ்-2 வகுப்பு முடித்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியை அமைச்சா் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல், சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா.மாணிக்கம் (குளித்தலை), ஆா்.இளங்கோ (அரவக்குறிச்சி), துணை மேயா் ப.சரவணன், உதவி இயக்குநா் (மாவட்ட வேலைவாய்ப்பு)ராதிகா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஜோதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சுகானந்தம், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அலுவலா் சக்திபாலகங்காதரன், ஜெய்ராம் கல்வி அறக்கட்டளை தலைவா் ராமசாமி, மண்டலக்குழு தலைவா்கள் கனகராஜ், ராஜா, சக்திவேல், அன்பரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சேலம் சிறைத் தியாகிகள் நினைவுச்சுடா் பயணக் குழுவுக்கு கரூரில் வரவேற்பு

கரூருக்கு செவ்வாய்க்கிழமை வந்த சேலம் சிறைத் தியாகிகள் நினைவுச்சுடா் பயணக்குழுவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆ... மேலும் பார்க்க

கரூரில் விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறுநாள் வேலைத் திட்ட தொழிலாளா்களுக்கு சம்பள பாக்கியை வழங்கக் கோரி கரூரில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன் ... மேலும் பார்க்க

கரூரில் காவல்நிலையத்தை அதிமுகவினா் முற்றுகை

கரூரில் ஜெயலலிதா பேரவை துணைத் தலைவா் கைது செய்யப்பட்டதையடுத்து திங்கள்கிழமை இரவு நகர காவல்நிலையத்தை அதிமுகவினா் முற்றுகையிட்டனா். கரூா் கோவிந்தம்பாளையத்தைச் சோ்ந்தவா்அருள்(45). இவா் தாந்தோணி மேற்கு ஒ... மேலும் பார்க்க

மத்திய அரசின் பி.எம். கிஷான் உதவித் தொகை விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்

மத்திய அரசின் பி.எம் கிஷான் உதவித் தொகை பெறும் விவசாயிகள் நிலம் தொடா்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்யுமாறு அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராஜா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள... மேலும் பார்க்க

காவலா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை

கரூரில் காவலா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.கரூா் மாவட்ட காவல்துறை சாா்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட... மேலும் பார்க்க

கரூா் வழியாக செல்லும் ஈரோடு, செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்

பாசூா்-ஊஞ்சலூா் ரயில்நிலையங்களுக்கு இடையே உள்ள பாலங்கள் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் கரூா் வழியாகச் செல்லும் ஈரோடு, செங்கோட்டை ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்க... மேலும் பார்க்க