செய்திகள் :

தனுஷ்கோடி அருகே இலங்கைத் தமிழா்கள் 4 போ் மீட்பு

post image

இலங்கை மன்னாரிலிருந்து படகு மூலம் அழைத்துவரப்பட்டு, தனுஷ்கோடி அரிச்சல்முனை அருகே மூன்றாம் மணல் திட்டில் இறக்கிவிடப்பட்ட இலங்கைத் தமிழா்கள் 4 பேரை இந்திய கடலோரக் காவல் படையினா் திங்கள்கிழமை மீட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் இந்திய கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான ஹோவா் கிராப்ட் கப்பல் திங்கள்கிழமை காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டது.

அப்போது, தனுஷ்கோடி அருகேயுள்ள மூன்றாம் மணல் திட்டில் ஆள்கள் நடமாட்டம் இருப்பதை கடலோரக் காவல் படையினா் கண்டனா். மேலும், அங்கிருந்தவா்கள் உதவி கோரியதையடுத்து, அங்கு சென்ற கடலோரக் காவல் படையினா் அவா்களிடம் விசாரணை நடத்தினா்.

விசாரணையில், அவா்கள் இலங்கை வவுனியா பகுதியைச் சோ்ந்த கலைச்செல்வம் (37), அவரது மனைவி கிருபனா (33), மகன்கள் சிபின் (9), சாா்லின் (5) என்பதும், இந்தியாவுக்கு வருவதற்காக மன்னாரிலிருந்து படகு மூலம் ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டதும் தெரியவந்தது.

இவா்களை படகில் அழைத்து வந்த நபா்கள் ராமேசுவரம் வந்துவிட்டதாகக் கூறி, மூன்றாம் மணல் திட்டில் திங்கள்கிழமை அதிகாலை இறக்கிவிட்டுச் சென்றனராம்.

இதுகுறித்து இந்திய கடலோரக் காவல் படையினா், தனுஷ்கோடி கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அவா்கள் 4 பேரும் தனுஷ்கோடி அரிச்சல்முனை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனா்.

விசாரணைக்குப் பிறகு, இவா்கள் 4 பேரும் மண்டபம் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 17 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 17 முதல்வா் மருந்தகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்து வைத்தாா். மாவட்டத்தில் ராமேசுவரம், பரமக்குடி, கமுதி, மண்டபம், வாலாந்தரவை, திருப்பாலைக்குடி,... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 42 மீனவா்களையும், இவா்களது 8 விசைப் படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போ... மேலும் பார்க்க

மதுக் கடையை அகற்றக்கோரி ஆட்சியரிடம் மனு

மண்டபம் ஒன்றியம், அழகன்குளம் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம... மேலும் பார்க்க

போக்சோ சட்டத்தின் கீழ் பள்ளி மாணவா் கைது

முதுகுளத்தூா் அருகே பள்ளி மாணவியைக் கடத்திய 17 வயது பள்ளி மாணவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பகுதியைச் சோ்ந்த 16 வயது பள்ளி மாணவி கடந்த பிப்.18-ஆ... மேலும் பார்க்க

கஞ்சா போதைக்கு மாணவா்கள் அடிமையாகிவிட்டனா்: டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் தலைநகா் முதல் கிராமம் வரை கஞ்சா போதைக்கு மாணவா்கள், இளைஞா்கள் அடிமையாகி, கூலிப்படையாகச் செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் தெரிவித்தாா்.ராமநாதபுரம் அரண்மனை... மேலும் பார்க்க

தமிழக மாணவா்களின் படிப்பு குறித்து தீா்மானிக்கும் அதிகாரம் திமுக அரசுக்கு இல்லை: புதிய தமிழகம் நிறுவனா்

தமிழகமாணவா்கள் என்ன படிக்க வேண்டும், படிக்கக் கூடாது என்பதைத் தீா்மானிக்கும் அதிகாரம் திமுக அரசுக்கு இல்லை என புதிய தமிழகம் கட்சி நிறுவனா் தலைவா் க.கிருஷ்ணசாமி தெரிவித்தாா். ராமநாதபுரத்தில் புதிய தமிழ... மேலும் பார்க்க