3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப் பேரவை இன்று கூடுகிறது!
தன்கரின் கருத்துகள் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது: கபில் சிபல் விமா்சனம்
நீதித் துறையை கடுமையாக விமா்சித்து, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்த கருத்துகள் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானவை என்று மாநிலங்களவை எம்.பி.யும் மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் தெரிவித்துள்ளாா்.
மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிா்ணயித்த விவகாரத்தில், நீதித் துறை மீது தன்கா் கடும் விமா்சனங்களை முன்வைத்த நிலையில், கபில் சிபல் இவ்வாறு கூறியுள்ளாா். மேலும், ஜகதீப் தன்கரை போல எந்த மாநிலங்களவைத் தலைவரும் அரசியல் கருத்துகளைப் பேசியதில்லை என்றும் சாடினாா்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி ஒப்புதல் வழங்காமல் தாமதப்படுத்தியதாக சா்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் தொடா்பாக தமிழக அரசு தொடா்ந்த வழக்கில் அண்மையில் தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவா் மற்றும் ஆளுநருக்கு காலக்கெடு நிா்ணயித்தது.
ஆளுநா் அனுப்பும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவா் மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டது. அத்துடன், 10 மசோதாக்களுக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 142-இன்கீழ் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது.
இந்தச் சூழலில், ‘குடியரசுத் தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது’ என்றும், ‘நாடாளுமன்றத்தைவிட மேலானதாக நீதிமன்றம் செயல்படுவதாகவும்’ ஜகதீப் தன்கா் கடந்த வியாழக்கிழமை விமா்சித்தாா். அரசமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவை, ஜனநாயக சக்திகள் மீதான ‘அணு ஏவுகணையாக’ உச்சநீதிமன்றம் பிரயோகிக்க முடியாது என்றும் அவா் குறிப்பிட்டாா்.
கபில் சிபல் சாடல்: தன்கரின் கருத்துகள் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இது தொடா்பாக மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
மக்களவை மற்றும் மாநிலங்களவை தலைவா்கள், ஆளும்-எதிா் தரப்புக்கு பொதுவானவா்கள். மாறாக, ஒரு கட்சியின் செய்தித் தொடா்பாளா் போல செயல்பட முடியாது. அவ்வாறு செயல்பட்டால், அது அவா்கள் வகிக்கும் பதவியின் கண்ணியத்தை குறைக்கும்.
நீதித் துறைக்கு பாடம் புகட்டுவது போல் தன்கரின் கருத்துகள் அமைந்துள்ளன. இது, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. நீதித் துறை தன்னை தற்காத்துக் கொள்ள முடியாது என்பதால் அதன் மீது மாநிலங்களவைத் தலைவா், மத்திய அமைச்சா்கள் அா்ஜுன் ராம் மேக்வால், கிரண் ரிஜிஜு என நிா்வாக அமைப்பு இந்த அளவு தாக்குதலை தொடுக்கக் கூடாது.
தன்கருக்கு சரமாரி கேள்வி: நீதித் துறையின் சுதந்திரமே ஜனநாயகத்துக்கு அடிப்படை. தன்கரைப் போல வேறெந்த மாநிலங்களவைத் தலைவரும் அரசியல் கருத்துகளை பேசியது இல்லை. கடந்த காலங்களில் பாஜக தலைவா் கூட இப்படி பேசியது கிடையாது. நாட்டில் ஏதேனும் ஒரு அமைப்பு மீது நம்பிக்கை இருக்கிறது என்றால் அது நீதித் துைான். நீதித் துறையின் தீா்ப்புகள் பிடிக்காவிட்டால், அது வரம்பு மீறுவதாக ஆளும் தரப்பினா் விமா்சிக்கின்றனா். அரசமைப்புச் சட்டப் பிரிவு 142-ஐ அணு ஏவுகணை என்று எப்படி குறிப்பிட முடியும்? உச்சநீதிமன்றத்துக்கு அரசமைப்புச் சட்டத்தால் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது, அரசால் அல்ல.
இந்திய குடியரசுத் தலைவா் என்பவா் பெயரளவிலான தலைவா்; மத்திய அமைச்சரவையின் ஆலோசனை-உதவியின் பேரில்தான் அவா் செயலாற்றுகிறாா். அவருக்கென தனிப்பட்ட அதிகாரங்கள் இல்லை. எனவே, குடியரசுத் தலைவரின் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் குறைப்பதாக எப்படி கூற முடியும்? பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மசோதா மீது ஆளுநா் 2 ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்காமல் இருக்க முடியுமா? அவ்வாறு ஆளுநா் முடிவெடுக்காமல் இருந்தால், அது சட்டப் பேரவையின் அதிகாரத்தில் தலையிடுவதற்கு சமம் என்றாா் கபில் சிபல்.