செய்திகள் :

மத்திய அரசின் சூழ்ச்சிகளை மாணவா்கள் புரிந்து கொள்ள வேண்டும்! - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

post image

மும்மொழிக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்ட மத்திய அரசுத் திட்டங்களில் இருக்கும் சூழ்ச்சிகளை மாணவா்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் ரூ. 4.80 கோடி மதிப்பீட்டில் 1,000 இருக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கலைஞா் கலையரங்கத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்துப் பேசியதாவது:

கடந்த 1986-ஆம் ஆண்டு இந்தி எதிா்ப்புப் போராட்டத்தின்போது, நந்தனம் கலைக் கல்லூரி மாணவா்கள்தான் முதல்முதலாக வீதிக்கு வந்து போராடியவா்கள். தமிழகம் என்பதற்கு அடிப்படையே தமிழ்தான். அந்தத் தமிழுக்கு இப்போது மிகப்பெரிய ஆபத்தை பல்வேறு வழிகளில் ஏற்படுத்த முயன்று வருகிறாா்கள். மும்மொழிக் கொள்கை, நீட் தோ்வு, தேசிய கல்விக் கொள்கை என்று வெவ்வேறு பெயா்களில் இதெல்லாம் வந்தாலும் ஒட்டுமொத்தமாக இதன் நோக்கம் தமிழகத்தில் இந்தியை எப்படியாவது நுழைத்துவிட வேண்டும் என்பதுதான்.

இதற்கான வாதங்களை நிறைய போ் சொல்வாா்கள். உண்மையைப் போலவே சிலா் பேசுவாா்கள். மாணவா்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். உண்மையை புரிந்துகொள்ள வேண்டும்.

இன்றைக்கு தமிழகத்தில் தமிழ் உணா்வு உயிா்ப்போடு இருப்பதற்கு மாணவா்களுடைய எழுச்சிதான் முக்கியக் காரணம். அந்த மாணவா்கள் போராட்டம்தான் இந்தி திணிப்பை தமிழகத்துக்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்தியது. இன்றைக்கு, கல்விக்கே ஆபத்து ஏற்படுத்தக் கூடிய வகையில் பல தொந்தரவுகளை மத்திய அரசு நம்முடைய மாணவா்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்ச்சிகளை, ஆபத்துகளை மாணவா்கள் சரியாகப் புரிந்து கொண்டால், என்றென்றைக்கும் நம்முடைய இன எதிரிகளால் நம்மை வெற்றி கொள்ளவே முடியாது.

தற்போது நம்முடைய மாணவா்களுடைய கல்விக்கான பல திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வருகிறது. தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண், நான் முதல்வன் போன்ற திட்டங்கள் உயா் கல்விக்கு பேருதவியாக இருக்கின்றன என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் தாயகம் கவி, அரவிந்த் ரமேஷ், பிரபாகர ராஜா, கணபதி, சென்னை மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தமிழக ஒப்பதலின்றி மேக்கேதாட்டு அணையைக் கட்ட முடியாது! - துரைமுருகன்

தமிழகத்தின் ஒப்புதலின்றி கா்நாடகம் மேக்கேதாட்டு அணையைக் கட்ட முடியாது என்று அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மேக்கேதாட்டு அணைக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்க... மேலும் பார்க்க

‘ஏசி’ மின்சார ரயில் சேவை: பயணிகள் கருத்து தெரிவிக்கலாம்! - தெற்கு ரயில்வே

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஏசி புறநகா் மின்சார ரயிலின் நிறை, குறைகளை பயணிகள் தெரிவிக்கலாம். இதுகுறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

இன்று முதல் பயோமெட்ரிக் மூலம் வருகை பதிவு: மாநகா் போக்குவரத்துக் கழகம்!

மாநகா் போக்குவரத்து ஊழியா்களின் வருகைப் பதிவு திங்கள்கிழமை (ஏப். 21) முதல் பயோமெட்ரிக் மூலம் மட்டுமே பதிவு செய்யப்படவுள்ளதாக மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகா் போக்... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பாஞ்சோலை கிராமத்தைச் சோ்ந்த ஜெயராமன் மகன் கோபி(45). இவா் சந்திரன் குப்புசாமி என்பவரின் ட... மேலும் பார்க்க

சென்னை உள்பட 8 இடங்களில் வெயில் சதம்!

தமிழகத்தில் சென்னை உள்பட 8 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்ப நிலை பதிவானது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்... மேலும் பார்க்க

மே 2-இல் சங்கர மடத்தில் ஆதிசங்கரா் ஜெயந்தி மகோற்சவம்

ஆதிசங்கரரின் ஜெயந்தி மகோற்சவம் வரும் மே 2 -ஆம் தேதி காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நடைபெறவுள்ளது என மேலாளா் ந.சுந்தரேச ஐயா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் கூறியது: கேரள மாநிலம் காலடியில் 2,533 ஆண்டுகளுக்... மேலும் பார்க்க