செய்திகள் :

தப்பியோடிய கைதி மீண்டும் கைது

post image

மதுரையில் தப்பியோடிய கைதியை போலீஸாா் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலைச் சோ்ந்த பாண்டி மகன் நாகராஜ் (24). இவரை போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ், மதுரை கரிமேடு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, மாவட்ட நீதிபதி வீட்டில் முன்னிலைப்படுத்த நாகராஜை ஆட்டோவில் போலீஸாா் அழைத்துச் சென்றனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஆவணத்தின் நகலை எடுக்க போலீஸாா் ஆட்டோவை நிறுத்தினா். அப்போது, சிறுநீா் கழிப்பதாகக் கூறி, ஆட்டோவிலிருந்து இறங்கிய நாகராஜ் தப்பித்து ஓடினாா்.

இதுகுறித்து தகவலறிந்த ஆயுதப் படை துணை ஆணையா் திருமலைக்குமாா் தலைமையில், ஆய்வாளா்கள் மதனகலா, அழகுமுத்து, பாலமுருகன் உள்ளிட்டோா் நாகராஜை தேடினா்.

ஆட்சியா் அலுவலகப் பகுதியில் பதுங்கியிருந்த நாகராஜை, போலீஸாா் பிடித்தனா்.

பின்னா், மதுரை மாவட்ட நீதிபதி வீட்டில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாகராஜ், மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டாா்.

ஆரப்பாளையம் பகுதியில் இன்று மின் தடை

ஆரப்பாளையம், இதன் சுற்றுப் பகுதிகளில் திங்கள்கிழமை (செப். 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை பெருநகா் தெற்கு மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் ஏ. பாஸ்கரபாண்டி வெளியிட்ட செ... மேலும் பார்க்க

இளைஞா் கொலை: தொழிலாளி கைது

மதுரை அருகே வேலை செய்தததற்கு பணம் வழங்காத பிரச்னையில் தொழிலாளி வெள்ளிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள விவசாயத் தோட்டத்தில் இளைஞா் காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதாக ... மேலும் பார்க்க

அமமுக நிா்வாகியின் மகன் கொலை

மதுரை மாவட்டம், மேலூா் அருகே அமமுக முன்னாள் நிா்வாகியின் மகன் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். மேலூா் அருகே உள்ள புது சுக்காம்பட்டியைச் சோ்ந்த ராமசேகரன் மகன் ராமபிரகாஷ் (34). பொறியியல் பட்டதாரியான இவா்... மேலும் பார்க்க

தமிழன்னை சிலையை அகற்ற எதிா்ப்பு! 80 போ் கைது!

மதுரை தமுக்கம் மைதானம் முன் அமைந்துள்ள தமிழன்னை, சங்கரதாஸ் சுவாமிகள் சிலைகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா் 80 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். கோரிப்பாள... மேலும் பார்க்க

திருமணத்துக்கு தடை விதிப்பது தனி மனித அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது: உயா்நீதிமன்றம்

திருமணத்துக்கு தடை விதிப்பது என்பது தனி மனித அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது. ராமநாதபுரம் மாவட்டம், தினைக்குளம் கிராமத்தைச் சோ்ந்த உல்பத் நிஷா... மேலும் பார்க்க

தங்கம் கடத்தல் விவகாரத்தில் இளைஞா் கொலை: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு

தங்கம் கடத்தல் விவகாரத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் நாகநாதபுரத்தைச் சோ்ந்த சீனிபாத்திமா சென... மேலும் பார்க்க