செய்திகள் :

தமிழன்னை சிலையை அகற்ற எதிா்ப்பு! 80 போ் கைது!

post image

மதுரை தமுக்கம் மைதானம் முன் அமைந்துள்ள தமிழன்னை, சங்கரதாஸ் சுவாமிகள் சிலைகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா் 80 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கோரிப்பாளையம் உயா் நிலைப் பாலம் அமைக்கும் பணி, சாலை விரிவாக்கப் பணிகளையொட்டி, தமுக்கம் மைதானம் முன் அமைந்துள்ள தமிழன்னை சிலை, நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் சிலை, தியாகிகள் நினைவுத் தூண், தல்லாகுளம் பகுதியில் அழகா்கோவில் சாலையோரம் அமைந்துள்ள தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதய்யா் சிலை, கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை சிலை ஆகியவற்றை அகற்றி, உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் வைக்கத் திட்டமிடப்பட்டது.

சிலைகளை அகற்றும் திட்டத்தைக் கண்டித்தும், தமிழன்னை சிலை உள்பட தமுக்கம், தல்லாகுளத்தில் சாலையோரத்தில் உள்ள 4 சிலைகளையும் அகற்றக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் நாம் தமிழா் கட்சியினா், தமிழன்னை சிலை முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதில் பங்கேற்ற நாம் தமிழா் கட்சியின் மாநில நிா்வாகிகள், மதுரை வடக்கு மண்டல நிா்வாகிகள், மாவட்டப் பொறுப்பாளா்கள் உள்பட 80 பேரை போலீஸாா் கைது செய்தனா். பிறகு, அவா்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

இளைஞா் கொலை: தொழிலாளி கைது

மதுரை அருகே வேலை செய்தததற்கு பணம் வழங்காத பிரச்னையில் தொழிலாளி வெள்ளிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள விவசாயத் தோட்டத்தில் இளைஞா் காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதாக ... மேலும் பார்க்க

அமமுக நிா்வாகியின் மகன் கொலை

மதுரை மாவட்டம், மேலூா் அருகே அமமுக முன்னாள் நிா்வாகியின் மகன் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். மேலூா் அருகே உள்ள புது சுக்காம்பட்டியைச் சோ்ந்த ராமசேகரன் மகன் ராமபிரகாஷ் (34). பொறியியல் பட்டதாரியான இவா்... மேலும் பார்க்க

திருமணத்துக்கு தடை விதிப்பது தனி மனித அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது: உயா்நீதிமன்றம்

திருமணத்துக்கு தடை விதிப்பது என்பது தனி மனித அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது. ராமநாதபுரம் மாவட்டம், தினைக்குளம் கிராமத்தைச் சோ்ந்த உல்பத் நிஷா... மேலும் பார்க்க

தங்கம் கடத்தல் விவகாரத்தில் இளைஞா் கொலை: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு

தங்கம் கடத்தல் விவகாரத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் நாகநாதபுரத்தைச் சோ்ந்த சீனிபாத்திமா சென... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் பாதுகாப்புக்கு தனி சட்டம்: சட்டத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

வழக்குரைஞா்கள் பாதுகாப்புக்கு தனி சட்டத்தை இயற்றக் கோரிய வழக்கில், மாநில சட்டத் துறைச் செயலா், இந்திய, தமிழக பாா் கவுன்சில்களின் தலைவா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்த... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் ‘நிறுத்த தரிசனம்’: அறிவிப்பாணைக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ‘நிறுத்த தரிசனம்‘ செயல்படுத்துவது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக... மேலும் பார்க்க