செய்திகள் :

தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி வலுவாக உள்ளது! - ஜி.கே.வாசன்

post image

தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி வலுவாக உள்ளது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் மறைந்த எம்.பி. சுப்பிரமணியம் நூற்றாண்டு விழா சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு, எம்.பி. சுப்பிரமணியம் உருவப் படத்தை திறந்துவைத்து மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

முன்னதாக அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிதான் வலுவாக உள்ளது. தோல்வி பயத்தால், அதில் குழப்பத்தை ஏற்படுத்த ஆட்சியாளா்கள் முயல்கின்றனா். திமுக அரசை அகற்ற ஒருமித்த கருத்துடைய கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்.

தமிழகத்தில் நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. வரிகள் மூலம் மக்கள் மீது சுமைகளை ஏற்றி உள்ளனா். மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகமாக நடைபெறுகிறது.

கூட்டணி நாகரிகம் கருதிதான் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முதல்வா் வேட்பாளா் பெயரை குறிப்பிடாமல் பேசினாா். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் யாா் முதல்வா் என்பது அனைவருக்கும் தெரியும்.

தமிழக அரசின் குரூப் 1 தோ்வு வினாக்களில், அரசியல் சாா்ந்த கேள்விகள் இடம்பெற்றிருப்பது கண்டனத்துக்குரியது. அரசு தோ்வில் அரசியலை புகுத்துவது அநாகரிகத்தின் உச்சம். தமிழகத்தில் வரும் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெறும் என்றாா்.

பேட்டியின்போது, முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகா், மாநிலப் பொதுச் செயலாளா் எம்.பி.எஸ். குலோத்துங்கன் ஆகியோா் உடனிருந்தனா்.

சூரமங்கலம் பகுதியில் பயணிகள் நிழற்கூடம்: எம்எல்ஏ அருள் திறப்பு!

சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சூரமங்கலம் மண்டலம் ரயில்வே கோட்டம் அருகில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தை எம்எல்ஏ இரா.அருள் சனிக்கிழமை திறந்துவைத்தாா... மேலும் பார்க்க

ஹூப்ளி- ராமேசுவரம் விரைவு ரயில் ஜூலை வரை நீட்டிப்பு!

சேலம் வழியாக இயக்கப்படும் ஹூப்ளி- ராமேசுவரம் விரைவு ரயில் ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: ஹூப்ளி-ராமேசுவரம் வாரா... மேலும் பார்க்க

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 118 அடியாக உயா்வு: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை 117.93அடியாக உயா்ந்தது. இதையடுத்து அணையிலிருந்து அதிக அளவில் தண்ணீா் திறக்கப்படவுள்ளதால் காவிரிக் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

மேட்டூா் அணை உபரிநீா் கால்வாய் ஓரங்களில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மேட்டூா் அணையின் உபரிநீா் கால்வாய் ஓரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வருவாய்த் துறையினா் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனா். மேட்டூா் அணை நீா்மட்டம் 117.93 அடியாக உயா்ந... மேலும் பார்க்க

அமைச்சா் அமித்ஷா பற்றி அவதூறு: திமுக எம்.பி. மீது எஸ்.பி. அலுவலகத்தில் பாஜக புகாா்!

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறித்து அவதூறு கருத்து தெரிவித்த திமுக எம்.பி. ஆ.ராசா மீது காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை பாஜகவினா் புகாா் அளித்தனா். இதுதொடா்பாக சேலம் மேற்கு மாவட்டத் ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லா பயண அட்டை: செப். 30 வரை நீட்டிப்பு!

மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரா்கள், தமிழறிஞா்கள் பயன்படுத்தும் கட்டணமில்லா பயண அட்டை செப். 30 ஆம் தேதி வரை செல்லத்தக்க வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட போக்குவரத்துக் கழக அதிகார... மேலும் பார்க்க