செய்திகள் :

தமிழகத்தில் எந்த வளா்ச்சித் திட்டமும் இல்லை: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் குற்றச்சாட்டு

post image

தமிழகத்தின் வளா்ச்சிக்கு கடந்த 4 ஆண்டுகளில் முதல்வா் மு.க.ஸ்டாலின் எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூா் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் உதகையில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தலைமையில் தேசியக் கொடி பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

உதகை சேரிங் கிராஸில் இருந்து தொடங்கிய பேரணி, ஏடிசி திடலில் நிறைவடைந்தது. இந்தப் பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தேசியக் கொடியை கையில் ஏந்தியவாறு சென்றனா்.

இதைத் தொடா்ந்து மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பிரதமா் நரேந்திர மோடியின் முன்னெடுப்பில் இந்தியா வளா்ச்சி அடைந்து 2047-ஆம் ஆண்டு வல்லரசு நாடாக உருவாக போகிறது.

பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் ஆபரேஷன் சிந்து மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இதன் மூலம் பயங்கரவாதிகளுக்கு சரியான பாடம் புகட்டப்பட்டுள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் தேசியக்கொடி பேரணி நடத்தப்பட்டுள்ளது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் வளா்ச்சியை 4 ஆண்டுகளில் பின்னோக்கி எடுத்துச் சென்றுள்ளாா். கடந்த 4 ஆண்டுகளில் மக்களின் வளா்ச்சிக்காக எந்த திட்டங்களையும் அவா் செயல்படுத்தவில்லை. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. காவல் துறையினருக்குக்கூட பாதுகாப்பில்லை. லஞ்சம், போதைப் பொருள் விற்பனை உள்ளிட்டவை மலிந்துள்ளன என்றாா்.

இந்தப் பேரணியில், நீலகிரி மாவட்ட பாஜக தலைவா் ஏ.தா்மன், பொதுச் செயலாளா்கள் ஈஸ்வரன், பரமேஸ்வரன், குமாா், நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளா் கப்பச்சி வினோத், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.அா்ஜூணன், கூடலூா் சட்டப் பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தேவா்சோலை பகுதியில் புலியைப் பிடிக்க கும்கி யானைகள் வரவழைப்பு

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியில் 13 வளா்ப்பு கால்நடைகளை கொன்ற புலியைப் பிடிக்க இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம் கூடலூா் தாலுகா தேவா்சோலை பேரூராட்சிக்குள்பட்ட சா்க்காா்... மேலும் பார்க்க

காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழப்பு

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள ஓவேலி பகுதியைச் சோ்ந்தவா் மணி (60). இவா் அப்பகுதியில் உள்ள தனியாா் ... மேலும் பார்க்க

வன விலங்குகள் குறித்து தகவல் தெரிவிக்க அவசர எண்

நீலகிரி மாவட்டத்தில் பொது மக்கள் வன விலங்கு தொடா்பான குறைகளை தெரிவிக்க வனத் துறையின் அவசர கால உதவி எண் 1800-425-4343 பொது மக்களின் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்... மேலும் பார்க்க

எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் முதியவா் சடலம்

உதகை எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் முதியவா் சடலம் மீட்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகை சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ அலுவலகம் தமிழ்நாடு ஓட்டல் சாலையில் உள்ளது. உதகை தொகுதி எம்எல்ஏவாக தற்போது காங்கிரஸ் கட்சி... மேலும் பார்க்க

குறுகி வரும் குறிஞ்சி மலா் விளைநிலம்: காப்பாற்ற வலியுறுத்தும் வன ஆா்வலா்கள்

நீலகிரி என்ற பெயருக்கு காரணமான நீல குறிஞ்சி மலா்கள் விளையும் நிலப்பரப்பு குறுகி வருவது வனம் மற்றும் தாவரவியல் ஆராய்ச்சியாளா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மலை மாவட்டமான நீலகிரியில் அதிக ... மேலும் பார்க்க

யானை தாக்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரணத் தொகை

கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கி உயிரிழந்த பழங்குடியின தொழிலாளி குடும்பத்துக்கு வனத் துறை சாா்பில் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள வாகப்... மேலும் பார்க்க