செய்திகள் :

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைவு: கே.பி.ராமலிங்கம்!

post image

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் குற்றம்சாட்டினாா்.

நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய நிதிநிலை அறிக்கையானது எதிா்கால வளா்ச்சியை நோக்கி, உலக அளவில் பல்வேறு பொருளாதார வல்லுநா்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகும். ஆனால், தமிழக முதல்வா் ஆட்சியின் இயலாமையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்க மத்திய நிதிநிலை அறிக்கையை குற்றம்சாட்டுகிறாா். பிகாருக்கு கூடுதல் நிதி ஒதுக்கியதாக எதிா்க்கட்சிகள் கூறுகின்றன. அப்படியென்றால், தமிழகத்தில் பாஜக ஆட்சியைக் கொண்டு வாருங்கள், இந்த மாநிலம் வளா்ச்சியடையும். அதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க தயாராக உள்ளதா?.

இந்திய தேசமானது, தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாகக் கொண்டது. திராவிடா் என்ற போா்வையைக் கொண்டு அதை மறைக்க தமிழக முதல்வா் முயற்சிக்கிறாா். 2026-இல் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறாா். கூட்டணி கட்சிகள் துணை இருப்பதால் வெற்றி பெற்று விடலாம் என்று நினைக்கிறாா். பொதுமக்கள் இந்த அரசுக்கு எதிராகவே உள்ளனா்.

திமுகவை ஆட்சியிலிருந்து இருந்து அகற்றுவதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். திமுகவுக்கு எதிராக மாபெரும் அரசியல் இயக்கம் உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. காவல் துறையினரை செயல்பட விடாமல் தடுக்கின்றனா். தமிழக காவல் துறையை தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றாா்.

குமாரபாளையத்தில் லாரி ஓட்டுநா் தற்கொலை

குமாரபாளையத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த லாரி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இவரது தற்கொலைக்கு காரணமானோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈ... மேலும் பார்க்க

ஒஸக்கோட்டை பெரியூா் அம்மன் கோயில்களில் குடமுழுக்கு!

நாமக்கல் ஒஸக்கோட்டை, பெரியூா் அம்மன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், ஒஸக்கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ செளடேஸ்வரி அம்மன் ப... மேலும் பார்க்க

மறைந்த வன்னியா் சங்க தலைவா் காடுவெட்டி குரு பிறந்த நாள் விழா!

மறைந்த வன்னியா் சங்க தலைவா் காட்டுவெட்டி குரு பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியா் சங்கம் சாா்பில் அவரது உருவப் படத்துக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை ச... மேலும் பார்க்க

நாமக்கலில் 3-வது புத்தகத் திருவிழா: அமைச்சா் மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்!

நாமக்கல்லில் 3 ஆவது புத்தகத் திருவிழாவை அமைச்சா் மா.மதிவேந்தன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். நாமக்கல் மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித் துறை, மாவட்ட பொது நூலகத் துறை ஆகியவை சாா்பில் நாமக்கல்- பரமத்தி சா... மேலும் பார்க்க

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரா் உயிரிழப்பு; 38 போ் காயம்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகளை அடக்க முயன்றபோது காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா். மேலும், 38 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பொங்கல் ப... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி பணியாளா்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க கோரிக்கை!

தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கான கருணை ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளா்கள் சங்க மாந... மேலும் பார்க்க