செய்திகள் :

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்கேடு: எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ குற்றச்சாட்டு

post image

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்கெட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டினாா் பாஜகவைச் சோ்ந்த நாகா்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எம்.ஆா்.காந்தி.

திருநெல்வேலியில் போலீஸாா் தாக்கியதாகக் கூறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 17 வயது சிறுவனை புதன்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

திருநெல்வேலியில் சிறுவன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது என முதல்வா் மு.க. ஸ்டாலின் கூறுகிறாா். ஆனால், பாளையங்கோட்டையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள வ.உ.சி. பூங்காவில் காவலருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையை கவனமாக கையாள முதல்வா் தவறி விட்டாா். தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு சீா்கெட்டுள்ளது.

திருப்புவனத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் போலீஸாா் தாக்கியதில் உயிரிழந்தது, திருநெல்வேலியில் சிறுவன் மீது போலீஸாா் தாக்குதல் நடத்தியிருப்பது உள்ளிட்டவை காவல் துறையின் சா்வாதிகார போக்கை காட்டுவதோடு, தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் மின்விளக்கு மற்றும் சுகாதார வசதி போதுமானதாக இல்லை என்றாா் அவா்.

பேட்டியின்போது பாஜக வடக்கு மாவட்டத் தலைவா் முத்துபலவேசம், பொதுச் செயலா் பாலாஜி கிருஷ்ணசாமி, பேச்சியப்பன், பாலமுருகன், துணைத் தலைவா் லட்சுமணராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கூடங்குளம் வழியாக இலங்கைக்கு பீடி இலை கடத்த முயற்சி: இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் கடல் பகுதி வழியாக இலங்கைக்கு பீடி இலை, சுக்கு ஆகியவற்றை கடத்திச் செல்ல முயன்ற இருவரை கடலோர பாதுகாப்பு படையினா் புதன்கிழமை கைது செய்தனா். கூடங்குளம் கடலோர பாதுகாப்பு பட... மேலும் பார்க்க

வீரவநல்லூா் வடபத்திரகாளியம்மன் கோயிலில் நாளை வருஷாபிஷேகம்

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் பட்டங்கட்டியாா் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு கன்னிமூல வெற்றி விநாயகா், கேட்டவரம் தரும் அருள்மிகு வடபத்திரகாளியம்மன், சுடலை மாடசுவாமி கோயிலில் வியாழக்கிழம... மேலும் பார்க்க

போக்ஸா வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. அம்பாசமுத்திரம் முத்தாரம்மன் கோயில் த... மேலும் பார்க்க

முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம்: 2 குழுக்களில் உறுப்பினா் சோ்க்கை

முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம்-2 குழுவில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் சிற... மேலும் பார்க்க

மானூா், நான்குனேரியில் திருந்திய குற்றவாளிகளுக்கு இன்று தொழில் கடனுதவி

திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு திருந்தியவா்கள் சுயதொழில் செய்ய ரூ.50 ஆயிரம் மானியத்துடன் கடன் வழங்கும் முகாம் மானூா், நான்குனேரி வட்டங்களில் வியாழக்கிழமை (ஜூலை 3) நடைபெறுகிறது. இ... மேலும் பார்க்க

அகஸ்தியா் அருவியில் குளிக்க அனுமதி

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அகஸ்தியா் அருவியில் புதன்கிழமைமுதல் குளிப்பதற்கு வனத் துறையினா் அனுமதி வழங்கினா். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், பாபநாசம் சரகத்துக்குள்... மேலும் பார்க்க