செய்திகள் :

தமிழகத்தில் தீவிரமடையும் தென்மேற்குப் பருவமழை!

post image

தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைவதால் தமிழகத்தில் மிக கனமழை மற்றும் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழையினால்தான் நாட்டிற்குத் தேவைப்படும் 75 சதவீத வருடாந்திர மழை ஜூன் முதல் செப்டம்பர் வரை கிடைக்கிறது. தென்மேற்குப் பருவமழை சீராக இருப்பதே இந்தியா முழுவதும் விவசாயம் செழிக்க ஆதாரமாக இருக்கிறது.

இந்த சூழலில் முதலில் கேரளத்தில் தொடங்கிய பருவமழை, சில நாள்களில் தமிழகத்தில் தொடங்கியது. வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கும் தென்மேற்குப் பருவமழையானது இந்தாண்டு 8 நாள்களுக்கு முன்னதாக மே 24-ம் தேதி தொடங்கியது. பருவமழை தொடங்கியதிலிருந்து இன்று வரை இந்தாண்டு கூடுதலாக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாள்களாக வெய்யிலின் தாக்கம் குறைந்து தமிழகம் முழுவதும் நல்ல மழைபொழிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மாலை நேரங்களில் பெய்யும் பலத்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதமான கலநிலை நிலவி வருகின்றது.

இந்த நிலையில், தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைவதால், இனிவரும் நாள்களில் மிக கனமழை, அதி கனமழையை எதிர்ப்பார்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடனும், ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக நெற்குன்றத்தில் 170 மி.மீ. மழை

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை நெற்குன்றத்தில் 170 மி.மீ. மழை பதிவானது. மேலும், நீலகிரிக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜூன் 14, 15) அதிபலத்த ம... மேலும் பார்க்க

25 மாவட்ட தலைமை மருத்துவமனைகள் விரைவில் திறப்பு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் ரூ. 1,018 கோடியில் கட்டப்பட்டு வரும் 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்க உள்ளாா் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவ... மேலும் பார்க்க

அரசுப் பணியாளா் தோ்வு முறையில் மாற்றம்: ஆய்வு செய்ய ஓய்வு நீதிபதி தலைமையில் குழு

உச்சநீதிமன்றத் தீா்ப்பால் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வு முறையில் ஏற்பட்ட மாற்றம், பாதிப்புகளை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.எம்.அக்பா் அலி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்... மேலும் பார்க்க

பொன்முடிக்கு எதிரான வழக்கு: டிஜிபி பதிலளிக்க உத்தரவு

சைவ, வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக முன்னாள் அமைச்சா் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்த வழக்கில், அது தொடா்பாக தமிழக டிஜிபி மற்றும் சென்னை க... மேலும் பார்க்க

கடும் பரிசோதனைகள் மூலம் பண்பாட்டை நிறுவியுள்ளோம்: கீழடி குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் கருத்து

கடும் பரிசோதனைகள் மூலமாக, தமிழ்ப் பண்பாட்டை நிறுவியுள்ளதாக கீழடி அகழாய்வு குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் கருத்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, எக்ஸ் தளத்தில் அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: கீ... மேலும் பார்க்க

சட்டப்பேரவைத் தோ்தல் கள நிலவரம்: பேரூா், ஒன்றிய, நகர நிா்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை

தோ்தலை எதிா்கொள்ள சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக கட்சி நிா்வாகிகளுடன் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனையை வெள்ளிக்கிழமை தொடங்கினாா். மாவட்டச் செயலா்கள், தொகுதிப் பொறுப்பாளா்கள், மாவட்ட அம... மேலும் பார்க்க