செய்திகள் :

ஆர்சிபி கூட்டநெரிசல்: பெங்களூர் கூடுதல் ஆணையரின் பணியிடை நீக்கம் ரத்து!

post image

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட விவகாரத்தில் பெங்களூர் கூடுதல் காவல் ஆணையர் விகாஷ் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான விவகாரத்தில், போதிய பாதுகாப்புகளை மேற்கொள்ளவில்லை என்ற காரணத்துக்காக பெங்களூர் காவல் ஆணையர் தயானந்த், கூடுதல் காவல் ஆணையர் விகாஷ் குமார் உள்பட 5 பேரை பணியிடை நீக்கம் செய்து முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார்.

இந்த பணியிடை நீக்கத்துக்கு எதிராக மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் கூடுதல் ஆணையர் விகாஷ் குமார் மனு அளித்திருந்தார்.

இந்த நிலையில், மனுவை விசாரித்த மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம், கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு ஆர்சிபியே பொறுப்பேற்க வேண்டும் என்றும், விகாஷ் குமாரின் இடைநீக்கத்தை ரத்து செய்து முந்தைய பணியிடத்திலேயே அவரை பணியமர்த்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“முதல்கட்ட விசாரணையில் மூன்று முதல் ஐந்து லட்சம் பேர் கூடியதற்கு ஆர்சிபி பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிகிறது. காவல்துறையிடம் உரிய அனுமதியோ சம்மதத்தையோ பெறவில்லை. சமூக ஊடகத்தில் திடீரென்று அவர்கள் பதிவிட்டதன் விளைவாக மக்கள் கூடியுள்ளனர்.

12 மணிநேரத்துக்குள் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. காவல்துறையினர் மனிதர்கள், அவர்கள் கடவுளோ, மந்திரவாதியோ கிடையாது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Central Administrative Tribunal has quashed the order suspending Bangalore Additional Commissioner of Police Vikash Kumar in the RCB victory celebration case.

இதையும் படிக்க : காவல்துறை என்ற மனித மிருகங்கள்: திமுக எம்எல்ஏ கடும் விமர்சனம்!

கொல்கத்தா மாணவி பாலியல் வன்கொடுமை: கைதான 3 மாணவர்களையும் ஜூலை 8 வரை காவலில் விசாரிக்க உத்தரவு!

கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவரை 3 மாணவா்கள் வன்கொடுமை செய்த வழக்கில், கல்லூரியின் முன்னாள் மாணவரான வழக்குரைஞா், 2 மூத்த மாணவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். சட்டக் கல்லூரி மாணவி கூட... மேலும் பார்க்க

கட்டண உயர்வுக்குப் பிறகு அறிமுகமான ரயில் ஒன் செயலி! சிறப்புகள் என்னென்ன?

அனைத்து வகையான ரயில் பயண சேவைகளையும் வழங்கும் வகையில் ரயில் ஒன் என்ற புதிய செயலியை மத்திய அரசு இன்று (ஜூலை 1) அறிமுகம் செய்துள்ளது.ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய, உணவு ஆர்டர் செய்ய, கருத்துகளைப் பதிவு... மேலும் பார்க்க

தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்தியது டிஜிட்டல் இந்தியா திட்டம்: அமித் ஷா

தொழில்நுட்பத்தை அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஜனநாயகப்படுத்தியது டிஜிட்டல் இந்தியா திட்டம் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி எம்.பி.யின் ராஜிநாமா ஏற்பு!

ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சீவ் அரோராவின் ராஜிநாமாவை மாநிலங்களவைத் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர் ஏற்றுக்கொண்டார்.பஞ்சாப் மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சஞ்சீவ... மேலும் பார்க்க

கார்ப்பரேட்டின் மிருகத்தனமான கருவி ஜிஎஸ்டி: ராகுல் காந்தி!

ஜிஎஸ்டி என்பது பொருளாதார அநீதி மற்றும் கார்ப்பரேட்டின் மிருகத்தனமான கருவி என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகம் செய்யப்பட்டு இன... மேலும் பார்க்க

சித்தராமையாவே முதல்வராக தொடருவார்! -டி.கே.சிவகுமார் திட்டவட்டம்

பெங்களூரு: ‘கர்நாடக முதல்வராக சித்தராமையாவே தொடருவார்’ என்று அம்மாநில துணை முதல்வர் டி. கே. சிவகுமார் இன்று(ஜூலை 1) செய்தியாளர்களுடன் பேசுகையில் தெரிவித்தார்.கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்று இ... மேலும் பார்க்க