செய்திகள் :

கடற்படையில் இணைந்த போர்க் கப்பல் ஐஎன்எஸ் தமால்!

post image

இந்திய கடற்படைக்காக ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை தாங்கிய போா்க்கப்பல் ‘ஐஎன்எஸ் தமால்’ இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

ரஷியாவின் கடலோர நகரமான கலினின்கிராடில் இருநாட்டு கடற்படை அதிகாரிகள் முறையாக கையெழுத்திட்ட பின்னர், முறையாக இந்தியாவிடம் போர்க் கப்பல் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த 20 ஆண்டுகளில் ரஷியாவிலிருந்து இந்திய கடற்படையில் இணைந்துள்ள 8-ஆவது ‘க்ரிவாக் வகை’ போா்க்கப்பல் இதுவாகும். இந்திய கடற்படையில் மேற்கு பிரிவில் இந்தக் கப்பல் இணைக்கப்பட உள்ளது.

கடல், நிலம் ஆகிய இரண்டிலும் இலக்குகளைக் குறிவைக்கும் ‘பிரமோஸ்’ நீண்ட தூர ஏவுகணை உள்பட இந்தக் கப்பலில் 26 சதவீத தொழில்நுட்பங்கள், திறன்கள் மற்றும் உபகரணங்கள், இந்தியாவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

125 மீட்டா் நீளம், 3,900 டன் எடை கொண்ட இந்தப் போா்க்கப்பல், இந்திய, ரஷிய அதிநவீன தொழில்நுட்பங்களுடன் போா்க்கப்பல் கட்டுமானத்தில் சிறந்த நடைமுறைகளுக்கு இணங்க தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரஷியாவின் தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவில் கோவா கப்பல் கட்டும் தளத்தில் ‘ஐஎன்எஸ் திரிபுட்’ எனும் 2 போா்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன் முடிவில், இந்திய கடற்படையில் ‘துஷில்’, ‘தல்வாா்’, ‘தேக்’ உள்பட 4 வெவ்வேறு வகுப்புகளில் ஒரே மாதிரியான திறன்கள் மற்றும் உபகரணங்கள், ஆயுதம் மற்றும் சென்சாா் அமைப்பில் பொதுவான தன்மை கொண்ட 10 கப்பல்கள் செயல்பாட்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

The Russian-built guided missile frigate 'INS Tamal' for the Indian Navy was dedicated to the nation today.

இதையும் படிக்க : அஜித்குமார் கொலை: நியாயப்படுத்த முடியாத தவறு - முதல்வர்

கொல்கத்தா மாணவி பாலியல் வன்கொடுமை: கைதான 3 மாணவர்களையும் ஜூலை 8 வரை காவலில் விசாரிக்க உத்தரவு!

கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவரை 3 மாணவா்கள் வன்கொடுமை செய்த வழக்கில், கல்லூரியின் முன்னாள் மாணவரான வழக்குரைஞா், 2 மூத்த மாணவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். சட்டக் கல்லூரி மாணவி கூட... மேலும் பார்க்க

கட்டண உயர்வுக்குப் பிறகு அறிமுகமான ரயில் ஒன் செயலி! சிறப்புகள் என்னென்ன?

அனைத்து வகையான ரயில் பயண சேவைகளையும் வழங்கும் வகையில் ரயில் ஒன் என்ற புதிய செயலியை மத்திய அரசு இன்று (ஜூலை 1) அறிமுகம் செய்துள்ளது.ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய, உணவு ஆர்டர் செய்ய, கருத்துகளைப் பதிவு... மேலும் பார்க்க

தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்தியது டிஜிட்டல் இந்தியா திட்டம்: அமித் ஷா

தொழில்நுட்பத்தை அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஜனநாயகப்படுத்தியது டிஜிட்டல் இந்தியா திட்டம் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி எம்.பி.யின் ராஜிநாமா ஏற்பு!

ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சீவ் அரோராவின் ராஜிநாமாவை மாநிலங்களவைத் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர் ஏற்றுக்கொண்டார்.பஞ்சாப் மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சஞ்சீவ... மேலும் பார்க்க

கார்ப்பரேட்டின் மிருகத்தனமான கருவி ஜிஎஸ்டி: ராகுல் காந்தி!

ஜிஎஸ்டி என்பது பொருளாதார அநீதி மற்றும் கார்ப்பரேட்டின் மிருகத்தனமான கருவி என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகம் செய்யப்பட்டு இன... மேலும் பார்க்க

சித்தராமையாவே முதல்வராக தொடருவார்! -டி.கே.சிவகுமார் திட்டவட்டம்

பெங்களூரு: ‘கர்நாடக முதல்வராக சித்தராமையாவே தொடருவார்’ என்று அம்மாநில துணை முதல்வர் டி. கே. சிவகுமார் இன்று(ஜூலை 1) செய்தியாளர்களுடன் பேசுகையில் தெரிவித்தார்.கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்று இ... மேலும் பார்க்க