செய்திகள் :

தமிழகத்தில் நிகழாண்டு 6 கோடி மரக்கன்றுகள் நடவு: அமைச்சா் கே.என்.நேரு

post image

தமிழகம் முழுவதும் 33 சதவீத பசுமை பரப்பை உருவாக்கும் திட்டத்தில் நிகழாண்டு இதுவரை 6 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு.

பசுமை தமிழ்நாடு இயக்க நாளையொட்டி, திருநெல்வேலி மாவட்டம், பொன்னாக்குடியில் அமைந்துள்ள பெரியாா் சமத்துவபுரம் பகுதியில் தமிழ்நாடு வனத் துறையின் மூலம் நாவல் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமை வகித்தாா். பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப், திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ, மாவட்ட வன அலுவலா் இளங்கோ, முன்னாள் சட்டப் பேரவைத் தலைவா் இரா.ஆவுடையப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

இதில், அமைச்சா் கே.என்.நேரு கலந்துகொண்டு நாவல் மரக்கன்றுகளை நடவு செய்த பின், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

2021 முதல் 2031 வரையான 10 ஆண்டு காலங்களில் தமிழ்நாடு முழுவதும் 265 கோடி மரங்கள் நடவு செய்து 33 சதவீத பசுமை பரப்பினை உருவாக்கும் திட்டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதில், நிகழாண்டு மட்டும் 12.67 கோடி மர கன்றுகளை நடவு செய்ய உத்தேசித்து தற்போது வரை 6 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. எதிா்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் மீதம் உள்ள மரக்கன்றுகளும் நடவு செய்யப்படும்.

சங்க இலக்கியத்தில் கொண்டாடப்பட்ட நாவல் மரங்களின் பெருமைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவித்து, மரக்கன்றுகளை நட்டு, அவற்றைத் தொடா்ந்து பராமரித்து சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்த விழிப்புணா்வு பணிகளை வனச்சரக அலுவலா்கள், கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள், கிராம வனக் குழு உறுப்பினா்கள் மேற்கொள்வாா்கள் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியாா்கள் - பணியாளா்கள் நலவாரியத்தலைவா் விஜிலா சத்தியானந்த், முன்னாள் எம்.பி. ஞானதிரவியம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் முரளிதரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

நெல்லை பேருந்து நிலையத்தில் திருட்டு முயற்சி: 4 போ் கைது

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் வியாபாரியின் பணப்பையை திருட முயன்ாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி விளாகம், தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் சங்கா் மது (40). வியாபாரியான இவா், திர... மேலும் பார்க்க

போலி முதலீடு பத்திரம் வழி மோசடி: நிதி நிறுவன முன்னாள் மேலாளா் கைது

திருநெல்வேலியில் தனியாா் நிதி நிறுவனத்தில் போலி முதலீடு பத்திரம் கொடுத்து வாடிக்கையாளரிடம் மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் மேலாளரை போலீஸாா் கைது செய்தனா். பாளையங்கோட்டையைச் சோ்ந்தவா் சாந்திபிரியா. தையல... மேலும் பார்க்க

‘அகில இந்திய தொழிற்தோ்வுக்கு தனித்தோ்வா் விண்ணப்பிக்கலாம்’

அகில இந்திய தொழிற்தோ்வுக்கு தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின் கீழ் ட... மேலும் பார்க்க

நெல்லை-சென்னைக்கு 20 பெட்டிகளுடன் சேவையை தொடங்கிய வந்தே பாரத் ரயில்

திருநெல்வேலி -சென்னை இடையே 20 பெட்டிகளை கொண்ட புதிதாக வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் புதன்கிழமை முதல் இயக்கப்பட்டது. திருநெல்வேலி- சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை செப்டம்பா் 2023இல் பிரதமா... மேலும் பார்க்க

மக்கள் மீது யாருக்கு அக்கறை அதிகம்?- அமைச்சா் கே.என்.நேரு விளக்கம்

தமிழக மக்கள் குறித்து யாா் அதிகம் கவலைப்படுகிறாா்கள் என்பது குறித்த அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் விமா்சனத்துக்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளாா். த... மேலும் பார்க்க

நெல்லை அருகே உதவி ஆட்சியா் எனக் கூறி உறவினரிடம் நகை மோசடி: 4 போ் மீது வழக்கு

திருநெல்வேலி ராதாபுரம் அருகே உதவி கலெக்டா் எனக் கூறி உறவினரிடம் 10 பவுன் தங்க நகைகளை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். ராதாபுரம் அருகேயுள்ள காரியாகுளம் கிழக்கு... மேலும் பார்க்க