செய்திகள் :

தமிழகத்தில் பாஜகவுக்கு வலுசேர்க்கும் முயற்சி! அமித் ஷா மீண்டும் வருகை?

post image

மத்திய அமைச்சர் அமித் ஷா மீண்டும் தமிழகத்துக்கு வருகை தரவிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

மத்திய அமைச்சர் அமித் ஷா மீண்டும் தமிழகம் வருகை தரவிருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் பேட்டியில் தெரிவித்தார்.

ஜூன் மாதம் மதுரையில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பங்கேற்ற அமித் ஷா, இனி ஒவ்வொரு மாதமும் தமிழகம் வரவிருப்பதாகக் கூறியிருந்தார்.

அந்த வகையில், ஜூலை இரண்டாம் வாரத்தில் அமித் ஷா, தமிழகத்துக்கு வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் வருகையின்போது, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பாஜகவை வலுப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்வார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், மதுரையில் நடத்தப்பட்டதுபோல சென்னையிலும் பாஜக நிர்வாகிகளுடன் தனி அறையில் கருத்துகளை அமித் ஷா கேட்டறியலாம் என்றும் கூறுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளான அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸையும் அமித் ஷா சந்தித்து, கூட்டணி குறித்து பேச வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. அதுமட்டுமின்றி, அமித் ஷாவின் வருகையின்போது, மேலும் சில கட்சிகள் கூட்டணி சேரலாம் என்றும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கி விட்டன. இதன் ஒரு பகுதியாக, பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான அமித் ஷா தலைமையில், ஜூன் 8 ஆம் தேதியில் மதுரையில் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், வானதி ஸ்ரீநிவாசன், அண்ணாமலை உள்பட பல முக்கிய நிர்வாகிகளும் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது, தமிழகத்தில் பாஜகவை பெரிய கட்சியாக மாற்ற வேண்டும் என்றும், கூட்டணிக் கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கட்சியினருக்கு வலியுறுத்தினார். மேலும், ஒவ்வொரு மாதமும் தமிழகத்துக்கு வருகை தந்து, ஆய்வு செய்யவிருப்பதாகவும் கூறினார்.

இதையும் படிக்க:இது வெறும் 5% தாக்குதல் மட்டுமே! இஸ்ரேலுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை!

சென்னையில் இரவு 1 மணி வரை மழை தொடர வாய்ப்பு

சென்னை உள்பட 8 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழை தொடர வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, நீ... மேலும் பார்க்க

கீழடிக்காக அதிமுக குரல் கொடுக்காதது ஏன்?: அமைச்சர் டிஆர்பி ராஜா கேள்வி

கீழடிக்காக அதிமுக குரல் கொடுக்காதது ஏன்? என அமைச்சர் டிஆர்பி ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழர் நாகரீகம் உலகின் மூத்த நாகரீகம் என நிறுவும் கீழடி சான்றுகளை அவமதிக்... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தேர்வு மறுகூட்டல் முடிவுகள் ஜூன் 23-ல் வெளியீடு

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான மறுகூட்டல் முடிவு ஜூன் 23-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், நடைபெற்று முடிந்த மா... மேலும் பார்க்க

சேலம் உருக்காலையில் மத்திய அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி ஆய்வு

மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் ஹெ.டி.குமாரசாமி சேலம் உருக்காலையில் ஆய்வு செய்தார்.மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி, அமைச்சராக பதவியேற்ற பின் சேலம் உருக்காலைக்கு முதல்முறையாக கடந்த ஆண... மேலும் பார்க்க

காதலி வீட்டில் தலித் இளைஞர் தூக்கிட்டு தற்கொலையா? நயினார் நாகேந்திரன் எழுப்பும் கேள்வி!

கன்னியாகுமரியில் காதலியின் வீட்டில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு, மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்த... மேலும் பார்க்க

மருத்துவமனையில் ஜி.கே.மணியை சந்தித்து நலம் விசாரித்த ராமதாஸ்!

நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணியை கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் கெளரவத் தலைவரும் அ... மேலும் பார்க்க