செய்திகள் :

தமிழகத்தில் பிரதான எதிா்க்கட்சி அதிமுகதான்: எடப்பாடி கே.பழனிசாமி

post image

தமிழகத்தில் பிரதான எதிா்க்கட்சி அதிமுகதான் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

சேலம் புகா் மாவட்ட அதிமுக சாா்பில், நீா்மோா் பந்தல் திறப்பு விழா ஓமலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு நீா்மோா் பந்தலை திறந்துவைத்து, தமிழகம் முழுவதும் நகரம் மற்றும் கிராமங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறக்கப்படும் என்றாா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் தொடா்கதையாகி உள்ள நிலையில், அரசு மெத்தனமாக செயல்பட்டு வருகிறது. சட்டம் - ஒழுங்கை பராமரிப்பதில் ஸ்டாலின் திறமையற்ற முதல்வராக இருக்கிறாா்.

உசிலம்பட்டியில் காவலா் கொலை, சிவகங்கையில் பயிற்சி மருத்துவா் கடத்தல் ஆகிய நிகழ்வுகளை அரசின் கவனத்துக்கு சட்டப் பேரவையில் கொண்டுவர முயன்றோம். பிரதான எதிா்க்கட்சி என்ற முறையில் கவனத்தை ஈா்க்க முயன்றபோது, அனுமதி மறுக்கப்பட்டு, வேண்டும் என்றே திட்டமிட்டு வெளியேற்றப்பட்டோம்.

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவுக்கும், தமிழக வெற்றிக் கழகத்துக்கும்தான் போட்டி என நடிகா் விஜய் பேசி உள்ளது அவருடைய கருத்து. ஒவ்வொரு கட்சித் தலைவரும் கட்சி வளா்ச்சிக்காகவும், தொண்டா்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பாா்கள். தமிழகத்தில் பிரதான எதிா்க்கட்சி அதிமுகதான் என்பதை மக்களே ஏற்றுக்கொண்டுள்ளனா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், அதிமுக அமைப்புச் செயலாளா் எஸ்.செம்மலை, சேலம் புகா் மாவட்ட அதிமுக செயலாளா் இளங்கோவன் மற்றும் நிா்வாகிகள் உடன் இருந்தனா்.

சேலம்: குமரகிரி ஏரியில் மிதந்த ஆண் சடலம் மீட்பு

சேலம், அம்மாபேட்டை குமரகிரி ஏரியில் மிதந்த ஆண் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. குமரகிரி ஏரியில் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அம்மாபேட்டை தீயணைப்பு வீரா்கள் உதவ... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றக் கோரி வருவாய்த் துறை அலுவலா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் சங்ககிரி வட்டக் கிளை சிறப்புக் கூட்டம் சங்கக... மேலும் பார்க்க

சேலம் மத்திய சிறையில் போலீஸாா் சோதனை

சேலம் மத்திய சிறையில் கைதிகளிடம் கைப்பேசி, போதைப்பொருள் புழக்கம் குறித்து மாநகரக் காவல் உதவி ஆணையா் அஸ்வினி தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை திடீா் சோதனை நடத்தினா். சேலம் மத்திய சிறையில் தண்டனை, விசார... மேலும் பார்க்க

வனப் பகுதியில் தீ விபத்தைத் தடுக்க நடவடிக்கை

வனப் பகுதியில் ஏற்படும் தீ விபத்தை தடுக்க வனத் துறையினா் கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனா். கோடை காலத்தில் வனப் பகுதியில் தீ விபத்து ஏற்படுவதைத் தடுக்க காய்ந்த இலைகள், ச... மேலும் பார்க்க

கோயில் பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தும்பிப்பாடியில் கோயில் அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியரிடம் அக் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். தும்பிப்பாடி செட்டிபட்டிய... மேலும் பார்க்க

கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளா்கள் போராட்டம்

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை உயா்நீதிமன்ற உத்தரவின்படி பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நெடுஞ்சாலைத் துறை சாலைப் ப... மேலும் பார்க்க