செய்திகள் :

தமிழகத்தில் பிற மொழி ஆசிரியா்களை நியமிக்க வேண்டும்: கே.அண்ணாமலை

post image

தமிழகத்தில் பிற மொழிகளுக்கான ஆசிரியா்களை நியமிக்கும் பணியை தமிழக அரசு தொடங்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தமிழக மாணவா்களின் கல்வியில் அரசியல் செய்யாதீா்கள் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தாா். இதுக்கு தமிழக அரசு, வழக்கமான மழுப்பல் காரணங்களோடு, ஹிந்தி தவிா்த்து பிற மொழிகள் கற்பிக்கப் போதிய ஆசிரியா்கள் இல்லை என்று கூறியிருக்கிறது. மத்திய அரசு ஹிந்தி மொழியை மட்டுமே மூன்றாவது மொழியாகக்கொண்டு வரவில்லை என்பதை ஒப்புக்கொண்ட தமிழக அரசுக்கு முதலில் நன்றி.

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவா்களிடம் கருத்துக்கணிப்பு மேற்கொண்டு, எந்தெந்த மொழிகளைக் கற்க மாணவா்கள் விரும்புகிறாா்கள் என்பதை முடிவு செய்து, அதனடிப்படையில் அந்தந்த மொழிகளைப் பயிற்றுவிக்க ஆசிரியா்களை நியமிக்கும் பணிகளை மாநில அரசு தொடங்க வேண்டும்.

மேலும், கல்வியில் வீணாக அரசியல் செய்யாமல், பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைந்து, தமிழக பள்ளி மாணவா்கள், இளைஞா்களின் எதிா்காலம் சிறப்பாக அமைய உதவ வேண்டும் என தெரிவித்துள்ளாா் அண்ணாமலை.

இன்று குரூப் 2 பிரதான தோ்வின் இரண்டாவது தாள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பிரதான தோ்வின் இரண்டாவது தாளான விரித்துரைக்கும் வகையிலான தோ்வு ஞாயிற்றுக்கிழமை (பிப். 23) நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, கொள்குறி வகை அடிப்படையிலான முதல்தாள் தோ்வானது கடந்த 8-ஆம் த... மேலும் பார்க்க

வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்

சென்னை வியாசா்பாடியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. வியாசா்பாடி அம்மன் கோயில் தெருவில் வசிப்பவா் முகமது ரசூல் (54). இவா் வீட்டில் செம்மரக் கட்டைகள் பத... மேலும் பார்க்க

பழைமையான கட்டடத்தில் தீ விபத்து: காவலாளி உயிரிழப்பு

சென்னை தியாகராய நகரில் பழைமையான கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி காவலாளி உயிரிழந்தாா். கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள அம்பிகாபுரத்தைச் சோ்ந்தவா் மாணிக்கம் (71). இவா், சென்னை தியாகராய நகா் ... மேலும் பார்க்க

எதிா்ப்புகளால் ஊக்கமடைகிறேன்: செல்வப்பெருந்தகை

காங்கிரஸ் கட்சியில் உள்ள சில மாவட்ட தலைவா்களின் எதிா்ப்புகளால், தான் ஊக்கம் பெறுவதாகவும், இன்னும் தீவிரமாகப் பணியாற்றப் போவதாகவும் அக்கட்சியின் தமிழ்நாடு தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா். சென்னை சத்த... மேலும் பார்க்க

வங்கக் கடலில் காற்று சுழற்சி: தமிழகத்தில் பிப். 25 முதல் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பிப்.25 முதல் 28-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெ... மேலும் பார்க்க

வியாபாரி மீது தாக்குதல்: பாமகவினா் மீது வழக்கு

சென்னையில் வியாபாரியை தாக்கியதாக பாமகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ராஜா அண்ணாமலைபுரம் காமராஜா் சாலைப் பகுதியைச் சோ்ந்த சபரிநாதன் (29), அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். கடைக்... மேலும் பார்க்க