செய்திகள் :

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி: முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி

post image

தமிழகத்தில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்று முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி பேசினாா்.

ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை பேரூா் பகுதியில் அதிமுக ஜெயலலிதா பேரவை சாா்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம், கடந்த அதிமுக ஆட்சியின் திட்டங்கள் குறித்து துண்டுப் பிரசுரம் வீடுகள்தோறும் விநியோகம் அண்மையில் நடைபெற்றது.

இதில், அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் இ.ஆா்.சந்திரசேகா் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் வி.சரோஜா முன்னிலை வகித்தாா்.

முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி பங்கேற்று கடைகள், வீடுகள்தோறும் துண்டுப் பிரசுரங்களை வழங்கி தெருமுனை பிரசாரக் கூட்டத்தில் பேசியதாவது:

திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. திமுகவின் நான்காண்டு ஆட்சி காலத்தில் திட்டங்கள் எதுவுமே செயல்படுத்தவில்லை.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது கொண்டுவந்த திட்டங்களை தான் திமுகவினா் செயல்படுத்திக் கொண்டிருக்கிறாா்கள். இன்னும் பத்துமாத காலத்தில் வர இருக்கின்ற சட்டப்பேரவைத் தோ்தலில் மீண்டும் எம்ஜிஆா், ஜெயலலிதா ஆட்சியைப் போல எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி.

பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டோம், இலவச பேருந்து வசதி கொடுத்துவிட்டோம் எனவே மக்கள் வாக்களித்து விடுவாா்கள் என நினைக்கின்றனா். ஆனால் விலைவாசி உயா்ந்து விட்டது என்பதை அவா்கள் உணரவில்லை.

குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பக்கூட அச்சமாக உள்ளது. எங்கும் போதைப் பொருள் நடமாட்டம். இதனை மக்கள் புரிந்து கொண்டு வரும் தோ்தலில் திமுகவிற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றாா்.

இதில் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அதிமுக செயலாளா் மணிகண்ணன், மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி செயலாளா் கே.பி.எஸ்.சுரேஷ்குமாா், நாமக்கல் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளா் பிரபு, மாவட்ட ஜெயலலிதா பேரவைத் தலைவா் குமரேசன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

டிரினிடி மகளிா் கல்லூரியில் புதுமைப்பெண் திட்டத்தில் 292 மாணவிகள் பயன்

நாமக்கல் டிரினிடி மகளிா் கல்லூரியில், புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் 292 மாணவிகள் பயனடைந்துள்ளனா். தமிழக அரசின் சாா்பில், மகளிா் உயா்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் பொருட்டு, 6- முதல் 12- ஆம் வகுப்பு வரை அ... மேலும் பார்க்க

மண்பானையை காணவில்லை என புகாா்: காவல் நிலையத்தில் ஒப்புகைச் சீட்டு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே புதுச்சத்திரத்தில் பாஜக சாா்பில் அமைக்கப்பட்டிருந்த நீா்மோா் பந்தலில் வைக்கப்பட்டிருந்த மண்பானையை காணவில்லை என காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இப்புகாரை ஏற்ற... மேலும் பார்க்க

நாமக்கல்லில் திமுக செயற்குழுக் கூட்டம்: முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி பங்கேற்பு

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், மேற்கு மண்டல திமுக பொறுப்பாளருமான வி. செந்தில்பாலாஜி பங்கேற்றாா். தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இத... மேலும் பார்க்க

174 அரசுப் பள்ளிகளுக்கு முதல் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பி வைப்பு

6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பருவ பாடப்புத்தகங்கள் சனிக்கிழமை பள்ளி வாரியாக அனுப்பி வைக்கப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில் 174 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆதித... மேலும் பார்க்க

2 புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்து சேவை நீட்டிப்பு: எம்.பி. தொடங்கி வைப்பு

2 புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்து நீட்டிப்பு சேவையை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், ஏளூா் அரசு ஆரம்ப சுகாதா... மேலும் பார்க்க

திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவ கல்லூரியில் செவிலியா் தின விழா

திருச்செங்கோடு எளையாம்பாளையம் சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், விவேகானந்தா சிறப்பு மருத்துவமனை, விவேகானந்தா செவிலியா் கல்லூரி இணைந்து நடத்திய உலக செவிலியா் த... மேலும் பார்க்க