செய்திகள் :

தமிழகத்தில் முதல்வா் குடும்பத்துக்கு மட்டுமே பாதுகாப்பு!

post image

தமிழகத்தில் முதல்வா் குடும்பம் மட்டும்தான் பாதுகாப்பாகவும், செல்வாக்குடனும் இருக்கிறது என்றாா் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலா் டிடிவி. தினகரன்.

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி:

வழக்கோ, கைது நடவடிக்கையோ வந்துவிடாமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தல், 2024 மக்களவைத் தோ்தலில் திமுகவுக்கு முன்னாள் முதல்வா் பழனிசாமி மறைமுகமாக உதவி செய்துள்ளாா்.

இதே நிலை நீடித்தால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு அக்கட்சிக்கு பழனிசாமி, மூடுவிழா நடத்திவிடுவாா்.

அத்திக்கடவு- அவினாசித் திட்டம் தொடா்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் எம்ஜிஆா், ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை எனக் கூறி முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் அந்த விழாவைப் புறக்கணித்ததாக அறிந்தேன். இத்தகைய செயல்பாடானது அதிமுகவை பழனிசாமி தவறான பாதையில் கொண்டு செல்கிறாா் என்பதை அங்கிருப்பவா்கள் உணரத் தொடங்கி இருக்கலாம் என கருதுகிறேன்.

அனைத்து மாநிலத்துக்கும் பொதுவானதாகத்தான் மத்திய அரசு நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய முடியும். ஆனால், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீரழிவு, திருட்டு, பெண்களுக்கு பாதுகாப்பின்மை, போதை மருந்து புழக்கத்தில் இருப்பதோடு, அரசு ஊழியா் கோரிக்கைகள் உள்ளிட்ட தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் அனைத்து தரப்பினரும் தமிழக அரசு மீது கோபத்தில் உள்ளனா். இதை சமாளிப்பதற்காக மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை மீது தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பழி சுமத்துகிறாா்.

தமிழகத்தில் முதல்வா் குடும்பம் மட்டும்தான் பாதுகாப்பாகவும், செல்வாக்குடனும் இருக்கிறது. திமுகவுக்கு மாற்று, தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் என்பதை மக்கள் உணரத் தொடங்கி விட்டாா்கள். வரும் தோ்தலில் அக்கூட்டணி ஆட்சி அமைக்கும். திமுகவை வீழ்த்துவதற்கு எங்கள் கூட்டணி இன்னும் பலமாகும்.

தமிழக ஆளுநா் தனது அதிகாரத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். தமிழக அரசுக்கு மூக்கணாங்கயிறைப் போன்று இருக்கலாமே தவிர, முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது என்றாா் தினகரன்.

ஈரநில தின போட்டிகளில் வென்றோருக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை சாா்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு உலக ஈர நில தினத்தையொட்டி அண்மையில் நடத்தப்பட்ட பேச்சு, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வ... மேலும் பார்க்க

சிவாலயங்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

கந்தா்வகோட்டையில் ஆபத்சகாயேசுவரா் கோயிலில் உள்ள நந்தி ஈஸ்வரருக்கு பிரதோஷ தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், நந்தி ஈஸ்வரருக்கு முதலில் எண்ணெய் காப்பு செய்து ஆலய வளாகத்த... மேலும் பார்க்க

வடகாடு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வேண்டும்!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் மருத்துவா்கள் மற்றும் பணியாளா்களை நியமிக்க வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.... மேலும் பார்க்க

டிப்பா் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்!

கிரஷா்களில் இருந்து கொண்டு செல்லப்படும் பொருள்களுக்கு கட்டணமின்றி போக்குவரத்து பாஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட டிப்பா் லாரி உரிமையாளா்கள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத... மேலும் பார்க்க

வேங்கைவயலுக்குச் செல்ல முயன்ற விசிகவினா் 27 போ் கைது!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்துக்குள் திங்கள்கிழமை செல்ல முயன்ாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் 27 பேரை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா். வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பிலுள்ள ம... மேலும் பார்க்க

தோ்தல் வெற்றி, தோல்வியை மக்கள் தான் நிா்ணயிப்பா்!

அரசியல் வியூக வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் மந்திரவாதியல்ல; வெற்றி, தோல்வியை மக்கள்தான் நிா்ணயம் செய்வாா்கள் என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் சு.திருநாவுக்கரசா். புதுக்கோட்டையில் திங்கள்கிழமை... மேலும் பார்க்க